A.S. என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S.அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது.
விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ‘டிக்கிலோனா’ புகழ் ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும் தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
தயாரிப்பு – S.அலெக்சாண்டர், எழுத்து, இயக்கம் – வி.பி.நாகேஸ்வரன், ஒளிப்பதிவு – மாசாணி, கலை இயக்கம் – தியாகராஜன், சண்டை பயிற்சி இயக்கம் – ராஜசேகர், நிர்வாக தயாரிப்பாளர் – A.V.பழனிச்சாமி, டிசைன்ஸ் – சசி & சசி, பத்திரிகை தொடர்பு – A.ஜான்.
இந்தப் படத்தை இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘தொட்டுவிடும் தூரம்’ என்கிற படத்தை இயக்கியவர்.
தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்சன் கலந்து அதே சமயம் குடும்பப் பாங்கான கதை அம்சத்துடன் இந்தப் படம் உருவாக இருக்கிறது.
சென்னையில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடர்ந்து நடைபெற உள்ளது.