full screen background image

விக்ரமின் நயன்தாரா கனவு பலித்தேவிட்டது..!

விக்ரமின் நயன்தாரா கனவு பலித்தேவிட்டது..!

’10 எண்றதுக்குள்ள’ படத்தின் தோல்வியால் கொஞ்சம் அப்செட் ஆகியிருந்தாலும், அடுத்தடுத்து நடந்த விஷயங்களினால் தனது நீண்ட நாள் கனவு ஒன்று நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகர் விக்ரம்.

விக்ரம் பல முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டிருந்தாலும் இதுவரையிலும் நயன்தாராவுடன் மட்டுமே நடிக்கவில்லை.  இதற்கு முன்பு ஒரு முறை விக்ரமுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பில் இருந்த நயன்தாரா, கடைசி நிமிடத்தில் விக்ரமுடன் முரண்பட்டு ஜகா வாங்கிக் கொள்ள அன்றிலிருந்து இன்றுவரையிலும் நயன்தாராவை விக்ரமால் நெருங்கவே முடியவி்லலை.

‘ஐ’ படத்தில்கூட ஷங்கர் முயற்சித்தும் இருவரையும் ஒன்று சேர்க்க முடியவில்லை. ஆனால் இப்போது அந்த ஷங்கரால் முடியாததை ஆனந்த் சங்கர் முடித்து வைத்திருக்கிறார்.

‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குநரான ஆனந்த் சங்கர் இயக்கும் அடுத்த புதிய படத்தில் நடிக்கிறார் விக்ரம். இதில்தான் நயன்தாரா அவருக்கு ஜோடியாகியிருக்கிறாராம். இதனை இயக்குநர் ஆனந்த் சங்கரே உறுதிப்படுத்தியிருக்கிறார். 

இந்தப் படத்தை ‘புலி’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்கேடி ஸ்டூடியோஸ் சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். 

இதுவொரு பக்கா கமர்ஷியல் படம் என்கிறார்கள் இந்த படக் குழுவினர். ’10 எண்றதுக்குள்ள’ படத்துல விட்ட பெயரை இதுல காப்பாத்தணும்னு நினைக்கிறாராம் விக்ரம்.

மொதல்ல நயன்தாராகிட்டேயிருந்து இவரை யாராச்சும் காப்பாத்தணுமே..?!

Our Score