full screen background image

‘தங்கமகன்’ படத்திற்காக தனுஷ் எழுதிய பாடல்..!

‘தங்கமகன்’ படத்திற்காக தனுஷ் எழுதிய பாடல்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக வரப் போகும் படம் ‘தங்கமகன்.’

இந்தப் படத்தில் தனுஷுடன் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்காக அனிருத் இசையில் தான் ஆடப் போகும் டூயட் பாடலுக்கு தானே பாடல் வரிகளை எழுதியிருக்கிறார் படத்தின் ஹீரோவான தனுஷ்.

அந்தப் பாடல் இதுதான் :

“என்ன சொல்ல; ஏது சொல்ல

கண்ணோடு கண் பேச வார்த்த இல்ல..

என்னென்னவோ உள்ளுக்குள்ள

வெள்ள சொல்லண்ணா வெக்கம் தள்ள..

சின்ன சின்ன ஆசை; உள்ள திக்கி திக்கி பேச..

மல்லிகைப்பூ வாசம்; கொஞ்சம் காத்தோட வீச..

உத்து உத்து பார்க்க; நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க..

புத்தம் புது வாழ்க்கை; என்ன உன்னோட சேர்க்க..

என்னோடு நீ உன்னோடு நான்..

ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்..

என்னோடு நீ.. உன்னோடு நான்.. ஒன்றாகும் நாள்..

சொல்லாமல் கொள்ளாமல் நெஞ்சோடு காதல் சேர..

நெஞ்சோடு காதல் சேர, மூச்சு முட்டுதே..

இந்நாளும் எந்நாளும் கை கோர்த்து போகும் பாதை

கை கோர்த்து போகும் பாதை கண்ணில் தோன்றுதே..

சொல்லாத எண்ணங்கள் பொல்லாத ஆசைகள்

உன்னால சேருதே பாரம் கூடுதே..

தேடாத தேடல்கள் காணாத காட்சிகள்

உன்னோடு காண்பதில் நேரம் போகுதே..”

பாடலை தனியாகப் படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. எளிமையாகத்தான் உள்ளது. ஆனால் இசையோடு சேர்ந்து வரும்போது இசையே வரிகளை அமுக்கி கேட்கவிடாமல் செய்து விடுகிறதே..? 

Our Score