K4 Kreations நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கேசவன் தயாரித்துள்ள திரைப்படம் ‘வேழம்’.
இந்தப் படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இவர்களுடன் ராஜ கிருஷ்ணமூர்த்தி(கிட்டி), சங்கிலி முருகன், பி.எல்.தேனப்பன், மராத்தி நடிகர் மோகன் அகாஷே மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – ஜானு சந்தர், ஒளிப்பதிவு – சக்தி அரவிந்த், படத் தொகுப்பு- A.K.பிரசாத், கலை இயக்கம் – சுகுமார்.R, சண்டை பயிற்சி இயக்கம் – தினேஷ் சுப்பராயன், ஒலிக் கலவை – M.சரவணகுமார், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா & ரேகா ( D’One).
இந்தப் படத்தை இயக்குநர் சந்தீப் ஷியாம் இயக்கியுள்ளார். இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உதவி இயக்குநராகவும், பல்வேறு விளம்பரங்கள் மற்றும் குறும் படங்களை இயக்கிய அனுபவமுள்ளவர்.
நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் SP Cinemas நிறுவனம், இந்த ‘வேழம்’ திரைப்படத்தை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது.
தயாரிப்பாளர் கேசவன், இந்தப் படம் குறித்துப் பேசும்போது, “நாங்கள் ஏற்கனவே பல்வேறு வணிகத் துறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வெற்றியடைந்து வருகிறோம், இப்போது ஊடகத் துறையில் எங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.
கலைப் படைப்புகள் மீது கொண்ட மிகுந்த ஆர்வத்துடன், K4 Kreations என்ற எங்களின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நல்ல படங்களை தயாரிக்க ஆவலோடு இருக்கிறோம்.
எங்களின் முதல் தயாரிப்பு முயற்சியான இந்த ‘வேழம்’ திரைப்படம் அதிக நம்பிக்கையையும் நேர்மறை அதிர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கி எங்கள் கனவை நனவாக்கிய ஒட்டு மொத்தக் குழுவிற்கும் நன்றி.
அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் மேலும் மற்ற அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் குழுவினர் அளித்த தீவிர ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் சந்தீப் ஷியாமுடன் பணிபுரிந்ததில் பெரும் மகிழ்ச்சி. தொழில் துறையின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான SP Cinemas எங்கள் திரைப்படத்தின் மேல் ஆர்வத்தை வெளிப்படுத்தியது எங்களது பாக்கியம். அவர்களின் மூலம் ‘வேழம்’ படத்திற்கு சிறந்த தியேட்டர் வெளியீடு கிடைக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம்.
‘வேழம்’ என்றால் ‘யானை’ என்றுதான் அர்த்தம். கதாநாயகன் மற்றும் படத்தில் சம்பந்தப்பட்ட பெரும்பாலான கதாபாத்திரங்கள் ஆக்கிரமிப்பு, பாதுகாப்பு மற்றும் நினைவாற்றல் போன்ற உயிரினங்களின் குணாதியங்களை கொண்டுள்ளார்கள். முழு திரைப்படமும் இந்த குணாதியங்களை சுற்றியே சுழல்கிறது…” என்றார்.
இந்தப் படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுமாம்.