full screen background image

புதுமுகங்கள் நடிக்கும் கிராமத்துக் கதையில் ‘வீரத் தேவன்’ திரைப்படம்

புதுமுகங்கள் நடிக்கும் கிராமத்துக் கதையில் ‘வீரத் தேவன்’ திரைப்படம்

‘வீரமற்ற விவேகம் கோழைத்தனம்; விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்’ என்ற பொன்மொழியை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘வீரத் தேவன்.’

இந்த படத்தில் கௌசிக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய அளவில் கராத்தே சாம்பியன் விருது பெற்றவர். கராத்தேவில் எல்லா விதமான பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் நாயகனாக நடிக்கும் முதல் படம் இது.

நாயகியாக மீனலோஷினி அறிமுகமாகிறார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ப் பெண். அந்த மாவட்ட கதைக் களம். அதற்கேற்ற தமிழ் பேசத் தெரிந்த நாயகி. “அந்த வட்டார பழக்க வழங்கங்களை அறிந்தவர் என்பதால் அவரை நாயகியாக அறிமுகப்படுத்தினோம்…” என்கிறார் இயக்குநர். 

மற்றும் ‘கராத்தே’ கோபாலன், வீரன் செல்வராசு, எம்.ஜி.சிவகுமார், மெய்ராஜன், ஜவஹர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மகேஷ்.K.தேவ், இசை – S.தர்மபிரகாஷ். பாடல்கள் – யுகபாரதி, சினேகன், வீரன் செல்வராசு,  படத் தொகுப்பு –  A.K.நாகராஜ், கலை – சுப்பு அழகப்பன், நடனம் – அசோக்ராஜா, பாரதி அகர்வால், சண்டை பயிற்சி – ஆக்சன் பிரகாஷ், நிர்வாகத் தயாரிப்பு – எம்.ஜி.சிவக்குமார், தயாரிப்பு நிறுவனம் – ஜி.எஸ்.மூவிஸ், தயாரிப்பாளர் கராத்தே கோபாலன், எழுத்து, இயக்கம் – வீரன் செல்வராசு.

படம் பற்றி இயக்குநர் வீரன் செல்வராசு பேசுகையில், “நாகரிகம் என்ற நச்சு இன்று நகரத்திலிருந்து நகர்ந்து கிராமப் புறங்களையும் தாக்கி கொண்டிருகிறது. இந்தக் காலக்கட்டத்திலும் உயிர்ப்புடன் இருப்பது குடும்ப உறவுகளை தாங்கி நிற்கின்ற கிராமப் புறங்கள்தான். 

கிராமப்புற மக்களின் உறவுகள், அதில் உள்ள சிக்கல்கள், ஆசை, அன்பு, கோபம் போன்றவையை காதல், செண்டிமென்ட், ஆக்சன் கலந்து உருவாக்கி உள்ளோம்.

படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சிவரை படத்தின் தலைப்புக்கேற்ப ஆக்சன் படமாக உருவாக்கி உள்ளோம். படத்தின் படப்பிடிப்பு மதுரை, உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது..” என்றார்.

Our Score