full screen background image

‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘உறியடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜயகுமார் நடிப்பில், ‘சேத்துமான்’ படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரவு, பகலாக 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.

சிறந்த படைப்புகளை தரும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட  ‘ரீல் குட் பிலிம்ஸ்’  நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆதித்யாவின் இரண்டாவது படைப்பாக   காதல், அரசியல், ஆக்சன் கலந்த  ஜனரஞ்சகமான குடும்பதிரைப்படமாக  இப்படம் தயாராகி வருகிறது.

இதில் கதாநாயகனாக விஜய்குமார் நடிக்க நாயகிகளாக ’அயோத்தி’ படத்தில் நடிக்கும் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் அறிமுக நடிகையான ரிச்சா ஜோஷி நடிக்கிறார்கள். இவர்களோடு முக்கிய கதாப்பாத்திரத்தில் ‘வத்திக்குச்சி’ திலீபன், ’கைதி’ ஜார்ஜ் மரியான்,  ’வடசென்னை’ பாவல்  நவகீதன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். 

இசை – கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு – மகேந்திரன் ஜெயராஜ், பிரபல எழுத்தாளர் அழகிய பெரியவன் , விஜய்குமார்,  தமிழ் மூவரும் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். படத் தொகுப்பு – C.S.பிரேம் குமார், கலை இயக்குநர் – ஏழுமலை ஆதிகேசவன்,  சண்டைப் பயிற்சி இயக்குநர் – ’ஸ்டன்னர்’ சாம், நடனப் பயிற்சி இயக்குநர் – ஸ்ரீகிரிஷ், ராதிகா.

ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்த படக் குழுவினர் விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

Our Score