full screen background image

‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘உறியடி’ விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘உறியடி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜய்குமார் நடிப்பில் தயாராகி வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்து வரும் புதிய ஆக்சன் படமான இதற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை.

‘உறியடி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகனாக நடித்த நடிகரும், இயக்குநருமான விஜய்குமார் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். அறிமுக இயக்குநர் அப்பாஸ் அ.ரஹமத் இயக்குகிறார். இவர் ‘உறியடி’ படத்தின் 2 பாகங்களிலும் விஜய்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

 இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தற்போது பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.

நடிகர் விஜய்குமார் நடித்த ‘உறியடி 2’ படத்தை சூர்யாவின் 2-டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்தது என்பதும்,  ‘சூரரைப் போற்று’ படத்தின் வசனத்தை விஜய்குமார் எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Our Score