திரிஷா புதிய படத்தில் புக் ஆவதுகூட இங்கே செய்தியில்லை.. அவருக்கு எப்போது கல்யாணம் என்பதுதான் பெரும் கவலை மீடியாக்களுக்கு..
கடந்த சில வருடங்களாகவே டாலிவுட்டின் டாப் பேமிலியின் ஹீரோவான ராணாவுடன் இணைந்து சுற்றிக் கொண்டிருந்தார் திரிஷா. திரிஷாவின் தந்தை ஹைதராபாத்தில் இறந்த போதுகூட திரிஷாவையும், அவரது அம்மாவையும் விமான நிலையத்திற்கே நேரில் வந்து அழைத்துச் சென்று இறுதிக் காரியம்வரையிலும் கூடவே இருந்து பார்த்துக் கொண்டார்.
அப்போது இருவரின் திருமணமும் முடிந்தது போலத்தான் என்று நினைத்தார்கள். பின்பு திடீரென்று இருவரும் பிரிந்தது போல ஷோ காட்ட.. கிசுகிசு எழுதுபவர்கள்தான் தவித்துப் போனார்கள். எதை வைத்துத்தான் எழுதுவது என்பது தெரியாமல் இருக்க.. சமீபத்தில் மீண்டும் தனது காதலை புதுப்பித்துவிட்டாராம் ராணா..
சென்ற மாதம் திரிஷா அமெரிக்காவுக்கு சென்றபோதுகூட ராணா திடீரென்று அங்கே ஆஜராகி திரிஷாவுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த கதையையும் சொல்கிறார்கள்.
இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பாக ஹைதராபாத்தில் நடந்த இயக்குநர் ராகவேந்திரராவின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ராணாவும், திரிஷாவும் ஜோடியாக ஒரே காரில் வந்து இறங்கியது, மீண்டும் இந்த ஜோடியை கல்யாண விஷயமாக பேச வைத்திருக்கிறது.
கூடவே திரிஷாவின் சென்னைவாழ் பார்ட்டி தோழிகளும் வந்திருந்தார்கள். அந்தக் கல்யாணத்து வந்தவர்கள் சைடாக ராணாவுக்கும், திரிஷாவுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துச் சொன்னதுபோல ‘ஹாய்’ சொன்னது ஸ்வீட்டான விஷயம்தான்..
ராணா, தெலுங்கு படவுலகின் பழம்பெரும் தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் பேரன். தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் சகோதரி மகன். செல்வாக்குக்கும், பணத்துக்கும் பஞ்சமில்லை.. இந்தாண்டு இவர்களது திருமணம் நிச்சயம் நடக்கும் என்கிறது தெலுங்குலகம்..!