full screen background image

“சிம்புகூட சேர்ந்து நடிப்பேன்..” – ஹன்ஸிகா மோத்வானி பேட்டி..!

“சிம்புகூட சேர்ந்து நடிப்பேன்..” – ஹன்ஸிகா மோத்வானி பேட்டி..!

‘டார்லிங் டம்பக்கு’ ஹன்ஸிகா “சிம்புவுடனான தனது பிரிவு குறித்து வெளியில் சொல்லி பரபரப்பாக்க விரும்பலை.. அமைதியா இருக்கவே விரும்புகிறேன்..” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

ஹன்ஸிகா தன் பேட்டியில், “சிம்புவுடனான பிரிவு பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.. யாராவது ஒருவராவது அமைதியா இருக்கணும். அமைதிதான் என்னோட வலிமை. அதுல சொல்றதுக்கு வேற ஒண்ணுமில்லை.. அவர் ரெண்டு வார்த்தை சொன்னால்.. நானும் ரெண்டு வார்த்தை சொல்வேன்.. அது யாரையாவது காயப்படுத்தும். நான் அவரை காயப்படுத்த விரும்பலை. ஆனாலும் அவரை இப்போதும் நான் வாழ்த்துகிறேன்.. இந்த விஷயத்தை திரும்பவும் என் லைப்ல நான் நினைச்சுப் பார்க்க விரும்பலை. நான் அதுல இருந்து ரொம்ப தூரம் போகவே விரும்புறேன்.. ஒருத்தர் கதவைச் சாத்திட்டு இதைப் பத்தி இனியும் பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டா அது இருவரையுமே பாதிக்காது.. 10 வருஷமானாலும் நான் இது விஷயமா அமைதியாத்தான் இருப்பேன்.. இதுல யாரையும் குற்றம் சொல்ற முடியாது. குற்றம் சொல்ல ரெண்டு விரலை நீட்டினா, மீதி மூணு விரல் உங்களையே குற்றம்சாட்டும்.

நாங்கள் பிரிந்த பின்பும் படத்திற்காக சேர்ந்து வேலை செய்தோம். அது என் வாழ்க்கையில் கடந்த காலமாயிருச்சு.. நான் சிரிக்க ஆரம்பிச்சாலே என் மைண்ட்ல ஏதோ இருக்குன்னு எல்லாரும் நினைக்குறாங்க.. நான் கோபப்பட்டாலும் சிரிக்கத்தான் செய்வேன்.. இப்பவும் அவரை எங்கயாவது பார்த்தால் சிரிக்கத்தான் செய்வேன். நான் அவர்கூட வேலை பார்க்க வேண்டி வரும்னு எனக்குத் தெரியும்.. இப்பவும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச ஒரு படம் முழுசும் முடியாமல் இருக்கு. நான் அந்தப் படத்தின் செட்டுக்கு கண்டிப்பா போவேன்.. சந்தோஷமா சேர்ந்து நடிப்பேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

இவங்க காதலையெல்லாம் புரிஞ்சுக்கவே முடியல.! என்னவோ போடா மாதவா..?

Our Score