“ராம், டிஷ்யூம், ஈ, தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கோ, நண்பன், என்றென்றும் புன்னகை” போன்ற மாபெரும் வெற்றிப் படங்களிலும், ஷங்கர், அமீர், ராஜேஷ், எஸ்.பி.ஜனநாதன் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் சிறப்பாக நடித்துள்ள ‘மாஸ்’ ஹீரோ ஜீவா, ‘ஈ’ படத்திற்கு பிறகு நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் புதிய படம் “திருநாள்”.
‘யான்’ படத்தின் தோல்விக்குப் பிறகு கடந்த சில மாதங்களாக பல கதைகளை கேட்டும் திருப்தியடையாத ஜீவாவை, இப்படத்தின் கதை வெகுவாக கவர்ந்ததால், உடனடியாக இப்படத்தின் படப்பிடிப்பை துவங்குமாறு இயக்குநரிடம் கூறியுள்ளார். மேலும், ‘தெனாவட்டு’ படத்திற்கு பிறகு, இப்படத்தில்தான் கிராமத்து இளைஞனாக ஜீவா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இப்படத்தின் கதையை கேட்ட உடனேயே நடிக்க சம்மதம் தெரிவித்து, இந்த பிசியான நேரத்திலும் தனது தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து படத்திற்காக வழங்கியுள்ளார். நகைச்சுவையும், காதலும், ஆக்சனும் சரிவிகிதத்தில் கலந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் P.S.ராம்நாத் இயக்க உள்ளார்.
‘திருநாள்’ படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. இதற்கென கும்பகோமத்தில் பிரம்மாண்டமான வகையில் செட் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை, திரு.எம்.செந்தில்குமார் அவர்கள் தொடங்கியுள்ள ‘கோதண்டபாணி பிலிம்ஸ்’ எனும் புதிய நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இசை – ஸ்ரீ; ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி; எடிட்டிங் – வி.டி.விஜயன்; கலை இயக்குனர் – சீனு; சண்டைப்பயிற்சி – சூப்பர் சுப்பராயன்; நடனம் – பாபி, பாலகுமார் ரேவதி, தினா.