full screen background image

‘தேஜாவு’ இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கும் இரண்டாவது படம் ‘தருணம்’

‘தேஜாவு’ இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கும் இரண்டாவது படம் ‘தருணம்’

ழென் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், ‘தேஜாவு’ படப் புகழ் இயக்குநர் அரவிந்த் ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் ‘தருணம்’ திரைப்படம் இன்று படக் குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தினை ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் இணை தயாரிப்பு செய்கிறது.

எழுத்து, இயக்கம் – அரவிந்த் ்ரீநிவாசன், ஒளிப்பதிவு – ராஜா பட்டாசார்ஜி, இசை – தர்புகா சிவா, படத்தொகுப்பு – அருள் இ.சித்தார்த், கலை இயக்கம் – வர்ணாலயா ஜெகதீசன், பத்திரிகை தொடர்பு – சதிஷ், சதிஷ் குமார், சிவா (AIM), சண்டை இயக்கம் – Stunner சாம், தயாரிப்பாளர் – புகழ்.A, ஈடன்(ழென் ஸ்டுடியோஸ்), இணை தயாரிப்பு – ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்.

இந்த விழாவில் அருண் பாலாஜி  பேசும்போது, “அரவிந்த் ்ரீநிவாசன் என்னுடைய நெருங்கிய நண்பர். இன்றைய இயக்குநர்களில் மிகத் திறமையான இளம் இயக்குநர். தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர். நல்ல படத்தை தருவார். இந்த திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்..” என்றார்.

தயாரிப்பாளர் விஜய் பாண்டி பேசும்போது, “இயக்குநர் அரவிந்த் ்ரீநிவாசன் எப்போதும் செலவு வைக்க மாட்டார். தயாரிப்பாளருக்கான இயக்குநர். இந்தப்படத்தைக் கண்டிப்பாகச் சிக்கனமான பட்ஜெட்டில் நல்ல படைப்பாக எடுப்பார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்…” என்றார்.

தயாரிப்பாளர் டில்லிபாபு பேசும்போது, “ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. அரவிந்த் ்ரீநிவாசன் முதல் படமே மிக நன்றாக இயக்கியிருந்தார். மிகப் பெரிய இடத்திற்கு செல்வார். நிறைய புது தயாரிப்பாளர்கள் வருகிறார்கள். நிறைய உதவி இயக்குநர்கள் கதைகளோடு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தயாரிப்பாளர் புகழ் வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

இயக்குநர்  கணேஷ் விநாயக் பேசும்போது, “தேஜாவு’ படத்திலேயே மிகத் திறமையான திரைக்கதையுடன் அசத்தியவர் அரவிந்த் ்ரீநிவாசன். இந்தப் படத்திலும் கண்டிப்பாக அசத்துவார். தயாரிப்பாளர் நிறையப் படங்கள் தயாரிக்க வேண்டும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

தயாரிப்பாளர் கோபி பேசும்போது, “அரவிந்த் ்ரீநிவாசன் எனக்கு பி.ஆர்.ஓ. டீம் மூலம்தான் தெரியும். அந்தப் படம் பார்த்த பின்புதான் அவரை சந்தித்தேன். இந்தப் படத்தில் தயாரிப்பு செலவைக் குறைத்து நல்லதொரு வெற்றிப் படைப்பை தருவார்கள் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி…” என்றார்.

படத்தொகுப்பாளர் அருள்.இ.சித்தார்த் பேசும்போது, “என்னைப் புதுமுகம் என்ற தயக்கமும் இல்லாமல் இயக்குநர் அரவிந்த் ்ரீநிவாசன் எனக்கு தேஜாவு படத்தில் வாய்ப்பு தந்தார். இந்தப் படம் பற்றிச் சொன்னபோது சம்பளமே பேச வேண்டாம். நான் செய்கிறேன் என்றேன். கிஷனுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். என் மனைவி அவரின் ரசிகை. இந்தப் படம் செய்வது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி…” என்றார்.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி பேசும்போது, “இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.  இயக்குநர் அரவிந்த் ்ரீநிவாசனுடன் ரொம்ப காலமாக வேலை செய்வதற்காகப் பேசிக் கொண்டிருந்தோம். கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் உடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாய்ப்பிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்..!” என்றார்.

நடிகை ஸ்மிருதி வெங்கட் பேசும்போது, “எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் அரவிந்த் ்ரீநிவாசனுக்கு நன்றி. இந்தப் படத்தில் இதுவரை செய்யாத கதாப்பாத்திரம். முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படம் பெரிய வெற்றி பெறும் என நம்புகிறேன்…” என்றார்.

நடிகர் கிஷன் தாஸ் பேசும்போது, “நான் இன்னும் புதுமுகம்தான். இயக்குநர் அரவிந்த் ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே முதலிலிருந்தே இந்தப் படத்தைப் பெரிய படமாக ட்ரீட் செய்யலாம் என்றார். இப்போதே மோஷன் போஸ்டர், புரமோ வீடியோவுடன் ஆரம்பித்துள்ளோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் திரைத்துறையில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவாதான், அவருக்கு என் நன்றி. அவர் இந்தப் படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி. கண்டிப்பாக இந்தப் படம் பெரிய வெற்றிப் படமாக அமையும்…” என்றார்.

தயாரிப்பாளர் புகழ் பேசும்போது, “அரவிந்த் ்ரீநிவாசனுடன் என் நட்பு 18 வருடங்களுக்கும் மேலானது. ஒரு நல்ல படைப்பைத் தரவே நாங்கள் உழைக்கிறோம். அரவிந்த் ்ரீநிவாசன் என் நண்பர் என்பதால் எனக்காக இன்னும் கடினமாக உழைக்கிறார். அவர் மணிரத்னம், கௌதம் மாதிரி படம் பண்ண வேண்டும் என்று சொல்வார். இந்தப் படம் அந்த கனவை நனவாக்கும். மிக நல்ல படக் குழு எங்களுக்கு அமைந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

இயக்குநர் அரவிந்த் ்ரீநிவாசன்  பேசும்போது, “எங்கள் படத்திற்காக வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் புகழ் 18 வருடங்களாக எனது நெருங்கிய நண்பர். பல காலம் நாங்கள் படம் செய்யப் பேசிக் கொண்டிருந்தோம், எனக்காக என்னை நம்பி எல்லாம் செய்வார். அவருக்கு இது வெற்றிப் படமாக அமையும்.

கிஷன், ஸ்மிருதி வெங்கட் புதுசான இளமையான ஜோடி, தர்புகா சிவா இசையமைக்கிறார். அவரிடம் நான்கு ஹிட் பாடல்கள் கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக பண்ணிடலாம் என்றார்.  என் ‘தேஜாவு’ பட எடிட்டர் இந்தப் படத்திலும் பணியாற்றுகிறார். ‘தேஜாவு’வை தாண்டி ஒரு நல்ல படைப்பைத் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் நன்றி. தேஜாவு’ படத்திற்குப் பிறகு மீண்டும் மிஸ்டரி திரில்லர் பண்ணக் கூடாது என்பதில் நிச்சயமாக இருந்தேன். பல கதைகள் பேசினோம். இந்தக் கதைக்காக 2 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். தயாரிப்பாளர் புகழ் என்னை எதுவுமே கேட்கவில்லை. மிக ஆதரவாக இருந்தார். இது கண்டிப்பாக ஒரு மைல் கல் படமாக இருக்கும்…” என்றார்.

Our Score