ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் தமிழர்கள் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் நாளை தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை இது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்களை விடுவிக்க 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்தார்.
ஆனால் அது பொறுக்காத அன்றைய மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்தவழக்கின் தீர்ப்பில் குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவுகளில் முட்டுக்கட்டை போட்ட உச்சநீதிமன்றம்; அரசியலமைப்பு சட்ட பிரிவுகளின் வாயிலாக விடுதலை செய்யும் வாய்ப்பை திறந்து வைத்தது.
ஆகவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கருணை உள்ளத்தோடு இந்த விடயத்தை அணுகி இந்த எழுவர் விடுதலையையும் இது போல் மிக நீண்ட காலமாக சிறையில் வாடும் சிறைவாசிகளின் விடுதலையையும் சாத்தியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த காலத்தில் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை அன்போடு செவிமடுத்து பல வரலாற்று தீர்மானங்களை இயற்றிய மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள், இந்த நேர்மையான வேண்டுகளையும் ஏற்று தமிழக மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பெருக்கெடுக்க வழி செய்யுமாறு கீழ்க்கண்ட மாணவர் / இளைஞர்அமைப்புகளின் சார்பில் வேண்டு கோள் வைக்கப்படுகிறது.
மாணவர் / இளைஞர்அமைப்புகளின் சார்பில் அதன் பிரதிநிதிகள் நாளைய தினம், திங்கள் அன்று (11-01-2016) காலை 11 மணியளவில் சட்டப் பேரவைக்கு சென்று இது குறித்த ஆவணங்களை கொடுத்து மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களை சந்திக்கின்றனர்..
இப்படிக்கு
மாணவர் / இளைஞர் அமைப்புகள்
செம்பியன், பிரிட்டோ, பிரதீப், பார்வைதாசன்
ஜோதிலிங்கம் மற்றும்
இயக்குநர் வ. கெளதமன்
தொடர்புக்கு: 9841325400 / 9884890103