full screen background image

7 வருடங்கள் கழித்து மீண்டும் துவங்குகிறது ‘சிப்பாய்’ திரைப்படம்

7 வருடங்கள் கழித்து மீண்டும் துவங்குகிறது ‘சிப்பாய்’ திரைப்படம்

7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘சிப்பாய்’ படத்தின் பிரச்சினைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இயக்குநர் சரவணனின் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், லட்சுமி மேனன் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘சிப்பாய்’.

சிம்பு நடிப்பில் வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்துக்குப் பிறகு இந்தப் படத்தின் பணிகளைத் தொடங்கினார் சரவணன்.

இதன் படப்பிடிப்பு முடியும் நிலையில், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கடந்த 7 ஆண்டுகள் ஆகியும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது.

தற்போது இந்தப் படத்தின் பிரச்சினைகள் அனைத்தையும் பேசி முடித்து வாங்கியுள்ளார் ஆர்.எஸ்.எஸ்.எஸ். பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் எஸ்.தணிகைவேல்.

கரோனா அச்சுறுத்தல் குறைந்துவிட்டதால், விரைவில் 2 பாடல்கள் மற்றும் இதர காட்சிகளின் படப்பிடிப்புகளை தொடங்க படக் குழுவினர் திட்டமிட்டு வருகிறார்கள்.

Our Score