full screen background image

மதுரை அன்புவின் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படம்!

மதுரை அன்புவின் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படம்!

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான G.N. அன்புசெழியனின் பிரம்மாண்டமான தயாரிப்பில், சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியது.

G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். D.இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.

தயாரிப்பு நிறுவனம் – கோபுரம் பிலிம்ஸ், தயாரிப்பாளர் – G.N.அன்புசெழியன், ஒளிப்பதிவு – ஓம் நாராயண், படத் தொகுப்பு – எம்.தியாகராஜன், கலை இயக்கம் – எம்.சக்தி வெங்கட்ராஜ், சண்டை இயக்கம் – மிராக்கிள் மைக்கேல், நடன இயக்கம் – பிருந்தா, பாபா.

கதையம்சத்தோடு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநரான ஆனந்த் நாராயண் இயக்குகிறார். 

அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும்விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது முழு வீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியிடும் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

Our Score