full screen background image

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கும் புதிய படம் அறிவிப்பு..!

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கும் புதிய படம் அறிவிப்பு..!

இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் S.S.ராஜமௌலி இயக்கவிருக்கும் புதிய படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’

300 கோடி ரூபாய பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.

இரண்டு புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் 1920-களின் பின்னணியில் உருவாகின்றது.

அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் சரணும், கோமரம் பீம்மாக நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர்.

Pics (1)

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் உடன்  சமுத்திரக்கனியும்  நடிக்கின்றார்.

நாயகிகளாக பாலிவுட் நடிகை அலியா பட், இங்கிலாந்து நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் இருவரும் நடிக்கின்றனர்.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகள் உருவாகவிருக்கும் இத்திரைப்படம் 2020-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் அறிமுக நிகழ்வு இன்று காலை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., நடிகர் ராம்சரண் மற்றும் தயாரிப்பாளரும் கலந்து கொண்டனர்.

“RRR’ என்ற தலைப்பு அனைத்து மொழிகளுக்கும் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும் படத் தலைப்பு. இருப்பினும், மொழிகளுக்கு ஏற்றவாறு படத்தின் தலைப்பு சுருக்கப்பட்டிருக்கும். ரசிகர்கள் படத்தின் தலைப்பை விரிவாக்கம் செய்து அவர்களது அபிமான படத் தலைப்புகளை #RRRTitle என்ற ஹேஷ்டக்குடன் ட்வீட் செய்யலாம். அவர்களின் தலைப்பு படத்திற்கு சரியாக தலைப்பாக இருந்தால், அதையே படத்தின் தலைப்பாக சூட்டுவோம்…” என்கின்றனர் படக் குழுவினர்.

Our Score