full screen background image

3 நாயகிகளுடன் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் ‘ரத்தம்’

3 நாயகிகளுடன் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் ‘ரத்தம்’

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படத்தை தமிழ்ப் படத்தை இயக்கிய இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்குகிறார்.

Infiniti Film Ventures நிறுவனத்தின் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப், பங்கஜ் போரா & S.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

‘ரத்தம்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் குழுவினர் பங்கேற்றிருப்பது படத்திற்கு பெரும் மதிப்பை தந்துள்ளது.

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளான மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் இந்தப் படத்தில் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். நடிகர் ஜெகன் கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – கோபி அமர்நாத், இசை – கண்ணன், படத் தொகுப்பு – சுரேஷ், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், எழுத்து, இயக்கம் – சி.எஸ்.அமுதன்.

நடிகர் விஜய் ஆண்டனி இதே தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, தற்போது ‘கொலை’ மற்றும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற மேலும் இரண்டு படங்களிலும் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரத்தம்’ படத்தின் 40 சதவிகித படப்பிடிப்பு ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டது. படத்தின் எஞ்சிய படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2022 கோடை கால வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.

Our Score