full screen background image

‘சித்தி’ ராதிகாவின் 380-வது திரைப்படம் ‘அனபெல் சுப்பிரமணியம்’..!

‘சித்தி’ ராதிகாவின் 380-வது திரைப்படம் ‘அனபெல் சுப்பிரமணியம்’..!

1978-ம் ஆண்டு தன்னுடைய 15-வது வயதில் ‘கிழக்கே போகும் ரெயில்’ படத்தின் கதாநாயகியாக இயக்குநர் பாரதிராஜாவினால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகையான ராதிகா சரத்குமார், இதுவரை 379 படங்களில் நடித்து இருக்கிறார்.

அவர் நடிக்காத வேடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 5 மொழி திரைப்படகளில், பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து சாதனை புரிந்து இருக்கிறார். இவர் அளவுக்கு இந்த 5 மொழிகளிலும் அதிகத் திரைப்படங்களில் நடித்த நடிகைகள் வேறு யாருமில்லை என்பது இவருக்கு மட்டுமே கிடைத்துள்ள பெருமையாகும்.

ராதிகா தற்போது நடித்து வரும் ‘அனபெல் சுப்பிரமணியம்’ என்ற திரைப்படம் அவருடைய 380-வது திரைப்படமாகும்.

இதில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்தது. எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்த ‘அடிமைப்பெண்’ படத்தில், இடம் பெற்ற “ஆயிரம் நிலவே வா” பாடல் காட்சி படமாக்கப்பட்ட ஜெய்ப்பூர் அரண்மனையில், இந்த ‘அனபெல் சுப்பிரமணியம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இந்தப் படப்பிடிப்பில், நடிகை ராதிகா சரத்குமார் 20 நாட்கள் கலந்து கொண்டு நடித்திருக்கிறார்.

இதுவரையிலும் கதாநாயகியாகவும், அம்மா வேடங்களிலும் 379 படங்களில் நடித்த ராதிகா சரத்குமார், இந்த 380-வது படத்தில் ஒரு நகைச்சுவை வேடத்தில் நடித்து இருக்கிறார். அவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தது இதுவே முதல்முறையாகும்.

கனமான கதாபாத்திரங்களில் மட்டுமல்ல…‘காமெடி’ வேடத்திலும் திறமையான நடிப்பை வழங்க முடியும் என்று ராதிகா இத்திரைப்படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

Our Score