full screen background image

‘புள்ளீங்கோ’ மாணவர்களைப் பற்றிய கதை ‘பரமு’ திரைப்படம்

‘புள்ளீங்கோ’ மாணவர்களைப் பற்றிய கதை ‘பரமு’ திரைப்படம்

சக்சஸ்புல் சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மாணிக் ஜெய் தானே நாயகனாக நடித்து தயாரித்து, இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் ‘பரமு.’

இந்தப் படத்தில் சித்ரா, ஷாலினி, சந்தியா, ரஞ்சித், மதி, சின்னமணி பெஞ்சமின் ஆகியோருடன், ஊர் மக்களும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – மோகன், பாடல்கள், இசை – கோவிந்தராஜ், கதை, திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம் – மாணிக் ஜெய்.

படம் பற்றி இயக்குநர் மாணிக் ஜெய் பேசும்போது, “கூலி வேலை செய்து பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கிறார்கள் பெற்றோர்கள். மகன்களோ கல்லூரியில் தறுதலையாக வலம் வருகிறார்கள். இப்படி இருக்கும் மாணவர்களை முகநூலில் ‘புள்ளீங்கோ’ என அழைக்கப்படுகிறார்கள்.

இப்படி கூத்தடிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் தீடீரென புயல் போல் சில திகிலான சம்பவங்கள் நேரிடுகிறது. அது அவர்களது வாழ்க்கையையே புரட்டி போடுகிறது. அதன் பிறகு ஒரு சஸ்பென்சோடு அவர்களது வாழ்க்கை பயணிக்கின்றது. ‘இதன் உச்சகட்டம் என்ன..?’ என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை..” என்றார்.

இத்திரைப்படம் சேலம், ஆட்டையாம்பட்டி, ஊட்டி, திருப்பத்தூர், மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் படமாகியுள்ளது.

Our Score