நல்லூர் சுரேஷ் வழங்க ஆக்கார் பட நிறுவனம் சார்பாக கே.கோடீஸ்வரராவ் தயாரித்திருக்கும் புதிய படம் ‘ஒரு நொடியில்’.
இந்தப் படத்தில் சிருஷ்டி டாங்கே, தபஸ்ரீ ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். மற்றும் ஆனந்தராஜ், சிசர் மனோகர், பிரித்வி, விஜயன், அபூர்வா சிவா, கீர்த்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – மகிசரலா
இசை – சாய்பர்வேஷ்
பாடல்கள் – சூர்யா
கலை – P.ஆனந்த் BFA
நடனம் – ராஜு, நவீன், பிரகாஷ்
ஸ்டண்ட் – சுப்புனு
எடிட்டிங் – செல்வன்
தயாரிப்பு – கே.கோடீஸ்வரராவ்
எழுத்து, இயக்கம் – M.A.சௌத்ரி.
படம் பற்றி இயக்குனர் சௌத்ரி பேசும்போது, “இது திகில் கலந்த பேய்ப் படம். பார்வதிபுரம் என்ற ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது ஒரு தீய சக்தி. ஐந்நூறு ஆண்டுகளாக அந்த ஊருக்குள் யார் வந்தாலும் அவர்களை பலி வாங்கி விடுகிறது. அந்தக் கிராமத்துக்குள் நுழைய குழந்தைகளை பலி கொடுத்து தனக்கு மாபெரும் சக்தி வரவேண்டும் என்று நினைக்கிறான் மந்திரவாதி ஒருவன்
அவனது எண்ணத்தை முறியடித்து டிவி சேனல் நிருபர் மதன் குழந்தைகளை காப்பாற்றுவதுடன் பார்வதிபுரத்தின் மர்ம முடுச்சை விடுவிப்பதுதான் இந்த ‘ஒரு நொடியில்’ படத்தின் கதை.
ஐந்நூறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததாக சொல்லப்படும் இதே கதை தற்பொழுது குஜராத்தில் நிகழ்ந்ததாக சமீபத்தில் செய்தித் தாள்களில் வெளிவந்துள்ளது. படு சுவாரஸ்யமான திரைக்கதையாக ஒரு நொடியில் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது…” என்றார்.