full screen background image

தேவயானி நடித்த ‘நிழற் குடை’ படம் மே 9-ம் தேதி வெளியாகிறது!

தேவயானி நடித்த ‘நிழற் குடை’ படம் மே 9-ம் தேதி வெளியாகிறது!

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வரும் மே மாதம் 9-ம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் ‘நிழற் குடை’.

தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர். மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

தயாரிப்பு – தர்ஷன் பிலிம்ஸ், ஜோதி சிவா, கதை, திரைக்கதை, இயக்கம் – சிவா ஆறுமுகம், வசனம் – ஹிமேஷ் பாலா, இசை – நரேன் பாலகுமார், கலை இயக்கம் – விஜய் ஆனந்த், படத் தொகுப்பு – ரோலக்ஸ்,  ஒளிப்பதிவு – ஆர்.பி.குருதேவ், பத்திரிக்கை தொடர்பு – A.ஜான்.

அறிமுக இயக்குநரான சிவா ஆறுமுகம் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் கே.எஸ்.அதியமானிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் சிவா ஆறுமுகம் கூறும்போது, “பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள். ஆனால் என் படத்தில் நடித்துள்ள குழந்தைகள் இருவருமே தேவயானிக்கு ஈடு கொடுத்து இயல்பாக நடித்துள்ளார்கள்.

நான் முதன்முதலாக உதவி இயக்குநராக பனியாற்றிய படம் ‘தொட்டா சிணுங்கி’. அந்தப் படத்தில்தான் தேவயானியும் கதாநாயகியாக அறிமுகமானார், பல வருடங்களுக்கு பின் நான் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தேவயானி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது,

இதன் ஆடியோ உரிமையை மாஸ் ஆடியோ நிறுவனமும் வெளிநாட்டு உரிமையை கஃபா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் தமிழ்நாடு புதுவையின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிளாக்பஸ்டர் புரடெக்க்ஷன் நிறுவனமும் பெற்றுள்ளன.

குடும்ப உறவுகளின் மேன்மையை பேசும் இந்த ‘நிழற் குடை’ திரைப்படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளது.

உலகமெங்கும் வரும் மே மாதம் 9-ம் தேதி இந்த ‘நிழற் குடை’ திரைப்படம்  வெளியாகிறது.

Our Score