எஸ்.பி.எம்.கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கும் புதிய படம் ‘நிராயுதம்’.
இதில் சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘ஒரு காதல் செய்வீர்’, ‘காதல் செய்ய விரும்பு’, ‘ரங்கா மிட்டாய்’ உட்பட பல படங்களில் நடித்தவர். கதாநாயகியாக சாரிகா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் வெங்கட் என்ற புதுமுகம் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – சரவணகுமார்
இசை – கனி
எடிட்டிங் – ஆர்.ஜி.ஆனந்த்
கலை – மோகன மகேந்திரன்
தயாரிப்பு நிர்வாகம் – C.ஜெயராஜ்
கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – M.B.ராஜதுரை.
தயாரிப்பு – எம்.மனோஜ் குமார், பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம்.
படம் பற்றி இயக்குனர் M.B.ராஜதுரை பேசும்போது, “கதாநாயகன் சந்தோஷ் அமெரிக்காவிலிருந்து வரும் பந்தா பேர்வழி. சாப்ட்வேர் கம்பெனில் பணிபுரிபவர் ஹீரோயின் சாரிகா. அறிமுக நடிகரான வெங்கட் கால் டாக்சி டிரைவர்.
ஒரு நாள் சரிகா வேலை முடிந்து வீடு திரும்பும்போது நடு இரவில் வெங்கட்டின் கால் டாக்சியில் பயணிக்கிறார். அப்போது சாரிகாவுக்கு மயக்க மருந்து ஸ்பிரே செய்து அவளைக் கடத்துகிறான் வெங்கட்.
சாரிகா கண்விழித்து பார்க்கும்போது தான் அரைகுறை ஆடையுடன் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை உணர்கிறாள். தப்பிக்க வழியைத் தேடி ஒவ்வொரு அறையாக கடந்து வரும்போது ஒரு அறையில் ஹீரோ சந்தோஷும் அதேபோல் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறாள். இருவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை..!
ஊட்டியில் பங்களா போன்று அரங்கு ஒன்று இந்தக் காட்சிக்காகவே அமைக்கப்பட்டு குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது…” என்றார்.