full screen background image

நடிகைகளுக்கே தெரியாமல் எப்படிங்க ஆபாசமா போட்டோ புடிக்க முடியும்..?

நடிகைகளுக்கே தெரியாமல் எப்படிங்க ஆபாசமா போட்டோ புடிக்க முடியும்..?

வாய்ப்பில்லாத நேரத்தில் ஏதாவது ஒரு படத்தில் கவர்ச்சியாக நடித்துவிட்டு வீட்டிற்கு வருவதற்குள் அடுத்தடுத்து கேரக்டர்களுடன் கூடிய படங்கள் கிடைத்துவிட்டால் முன்பு நடித்த கவர்ச்சி இமேஜை காலி செய்ய நடிகைகள் எல்லாமும் செய்வார்கள்..

இப்படித்தான் ஆண்ட்ரியா ஒரு படத்தில் விலை மாது கேரக்டரில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். நடித்தும்விட்டார். ஆனால் அதற்குப் பின்பு ‘விஸ்வரூபம்’ மற்றும் தொடர்ச்சியான சில நல்ல படங்கள் கிடைத்துவிட இப்போது அந்தப் படத்தின் ஸ்டில்ஸ்களைகூட வெளியிடக் கூடாது என்று அந்தப் படத்தின் இயக்குநரிடம் அன்புக் கட்டளையிட்டிருக்கிறாராம்.

‘எவடு’ என்ற படத்தின் ஒரு பாடல் காட்சியில் படு கவர்ச்சியான உடையணிந்து நடனம் ஆடியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்தப் பாடல் காட்சியின் ஸ்டில்கள்  2 மாதங்களுக்கு முன்பாகவே வெளியாகிவிட்டன. படமும் இப்போது வெளியாகிவிட்டது. அந்தப் புகைப்படங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

இத்தனை நாட்கள் கழித்து இது தனது இமேஜை காலி செய்வதை உணர்ந்து, தனக்குத் தெரியாமல் இந்தப் புகைப்படங்களை எடுத்து தனது அனுமதியில்லாமல் வெளியிட்டிருப்பதாக காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார் ஸ்ருதி..

அருந்ததி.. சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் தற்போது ‘தொட்டால் தொடரும்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சென்ற ஆண்டு இவர் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்த ‘நேற்று இன்று’ படத்தில் தன்னை மிகவும் கவர்ச்சியாகவும், ஆபாச நோக்கிலும் தனக்கே தெரியாமல் படமெடுத்துவிட்டதாக ஒரு புகாரை கூறியிருந்தார். அதெப்படி அவருக்கே தெரியாமல் இப்படி கவர்ச்சியாக படமெடுக்க முடியும் என்பதை அவரும் சொல்லவில்லை. அருந்ததியின் அந்தப் புகைப்படங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

இதே கேள்வியை ‘நேற்று இன்று’ படத்தின் இயக்குநர் பத்மாமகனிடம் கேட்டபோது அவர் வேறொரு கதையைச் சொல்கிறார்.

“எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை ஸார்.. அந்தக் காட்சில அருந்ததிக்கு ஒரேயொரு கருப்பு பனியன்தான் காஸ்ட்யூம். அதை முன்னாடியே அவங்க்கிட்ட சொல்லிட்டேன். அவங்க சம்பந்தப்பட்ட பாடல் காட்சிய கொஞ்சம் கிளாமரோட அதே டிரெஸ்ல ஷூட் பண்ணிட்டேன். அது படத்துக்கும், அவங்களோட கேரக்டருக்கும் தேவையா இருந்துச்சு.. அவ்ளோதான்..

அதுக்கப்புறம் நான் ஸ்பாட்ல இல்லாதபோது ஸ்டில் போட்டோகிராபருக்கு அருந்ததியே இப்படி போஸ் கொடுத்திருக்காங்க. அதை அவரும் எடுத்து பரபரப்பா இருக்குமேன்னு நினைச்சு நாலு பத்திரிகைகளுக்கு கொடுத்து ரிலீஸ் பண்ணிட்டாரு. இப்போ அருந்ததி இப்படி புகார் சொல்றாங்க.. இதுல நான் என்ன செய்ய முடியும்..?” என்கிறார் அப்பாவியாய்..!

அதானே.. போஸ் கொடுக்குறதுக்கு முன்னாடியே இதையெல்லாம் நம்ம நடிகைகள் யோசிக்கவே மாட்டாங்களாக்கும்..?

Our Score