ஒருவருக்கொருவர் மிகவும் அன்போடு, அன்னியோன்யமாக வாழ்ந்துவரும் தம்பதிகள், நெருக்கமாக இருந்த ஒரு சமயத்தில் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு விளைவுதான் இந்தப் படம். ஒரு உண்மை சம்பவத்தின் பாதிப்பில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதில் கதாநாயகனாக அஸ்வினி கார்த்திக், கதாநாயகிகளாக வித்ர்ஷா, சனா நடிக்க… சசி இயக்கியிருக்கிறார். படத்தின் கடைசி காட்சிவரை ஒரு திரில் இருப்பதுடன், காதலுடன் கூடிய பொழுது போக்கு நிறைந்த படமாகவும் இது தயாராகியிருக்கிறது.
குற்றங்கள் எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அதை எதிர்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் வேண்டும் என்பதை உணர்த்தும் படமாகவும் இது இருக்கும். முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படம் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில்ல் படமாக்கப்பட்டுள்ளது. படம் விரைவில் வெளிவர உள்ளது.