full screen background image

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் குஜராத்தி மொழி திரைப்படம்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் குஜராத்தி மொழி திரைப்படம்

‘ஆண்டவன் கட்டளை’ தமிழ்ப் படத்தை குஜராத் மொழியில் ரீமேக் செய்கிறார்கள் நட்சத்திரக் காதலர்களான நயன்தாராவும், விக்னேஷ் சிவனும்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களது Rowdy Pictures நிறுவனத்தின் சார்பில்  தரம்மிக்க படங்களை வழங்கி  பெரும் பாராட்டுக்களை குவித்து  வருகின்றனர்.

‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து  தமிழ்த் திரையுலகில் மேலும் சில படங்களை தயாரிக்க இந்தக் காதலர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இப்போது இந்தத் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் மணிகண்டனின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரித்திகா சிங் முக்கிய வேடங்களில் நடித்த, தமிழ் திரைப்படமான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தை குஜராத் மொழியில் ரீமேக் செய்கிறது.

இந்த ரீமேக் படத்திற்கு ‘சுப் யாத்ரா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இத்திரைப்படத்தில் குஜராத்தி சூப்பர் ஸ்டார் நடிகரான மல்ஹர் தாக்கர் மற்றும் மோனல் கஜ்ஜர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

இத்திரைப்படத்தை  குஜராத்தி திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநரான மனிஷ் சைனி இயக்குகிறார்.

தயாரிப்பாளர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இப்படம் மூலம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி என்றும், மேலும் குஜராத்தி திரையுலகில் தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

 
Our Score