ஸ்ரீகிருஷ்ணா டாக்கீஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாதவன் இயக்கும் திரைப்படம், ‘நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க’.
ஒவ்வொரு மனிதனின் சூழ்நிலை மற்றவர்களுக்கு எவ்வளவு நகைச்சுவையாய் இருக்கக் கூடும் என்பதை நகைச்சுவையுடன் சொல்லும் படம்தான் இந்த ‘நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க’ திரைப்படம்.
சிங்கமுத்து, சுவாமிநாதன், நடன இயக்குநர் சிவசங்கர், நாயகி தேவிகா மாதவன் என நகைச்சுவைக்கு பெயர்போன கூட்டணியுடன் களமிறங்குகிறார் அறிமுக நாயகன் இந்திரஜித்.
நம்முடைய எல்லா நல்லது கேட்டதையும் நம்மை சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் கூறிக் கொண்டே இருப்பார்கள். முக்கிய கதாப்பாத்திரங்களின் சூழ்நிலைகளை அடிப்படையாய்க் கொண்டு நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டது இந்த ‘நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க’ திரைப்படம்.
D.S.வாசன் ஒளிப்பதிவில், சுரேஷ் அர்ஸ் படத் தொகுப்பில், ரிஷால் சாய் இசையமைப்பில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார் யுகபாரதி. படம் விரைவில் வெளியாக உள்ளது
“படத்தைப் பார்த்த தொழில் நுட்ப கலைஞர்களும், திரையுலகப் பிரமுகர்கள் அனைவருமே இந்தப் படத்தைப் பத்தி நாலு வார்த்தை நல்ல விதமாதான் சொல்லிருக்காங்க. இது ரசிகர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்ன்னு நம்புகிறோம்..” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் அறிமுக இயக்குநர் மாதவன்.