எதைச் செய்தாலும் அதில் ஒரு அவசரம்.. அதுதான் மீரா ஜாஸ்மினின் ஜாதகம்..! இன்றைக்கும் அதுவே நடந்திருக்கிறது..!
வரும் புதன்கிழமையன்று திருவனந்தபுரத்தில் இருக்கும் பாளையம் சர்ச்சில் அவருடைய திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் இன்றைக்கு அவருடைய சொந்த ஊரான எர்ணாகுளம், சிலவானூரில் உள்ள அவரது வீட்டில் பதிவுத் திருமணம் நடந்தேறிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன..!
மாப்பிள்ளை அனில்ஜான் டைட்டஸ், துபாயில் வேலை செய்கிறாராம்..! திருமண விழாவும், வரவேற்பு விழாவும் காத்திருக்கும் நிலையில் இந்த பதிவுத் திருமணத்துக்கு என்ன அவசரமென்று தெரியவில்லை.. ஆனாலும் மணமக்கள் நீடுழி வாழ்கவென்று வாழ்த்துவோம்..!
Our Score