இயக்குநர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘காலாபாணி’. மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் பிரபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபு நடித்த முதல் மலையாள படமும் அதுதான். இப்படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் கலைப்புலி S.தாணு வெளியிட்டார்.
தற்போது ‘காலாபாணி’ வெளியாகி 25 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் மீண்டும் மோகன்லாலும், பிரபுவும் இணைந்து நடித்திருக்கும் மலையாள படமான ‘மரைக்கார் அரவிபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தை ‘மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்’ என்னும் பெயரில் தமிழில் கலைப்புலி S.தாணுவே வெளியிடுகிறார்.
மேலும் இத்திரைப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ், நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால், சித்திக். சுரேஷ் கிருஷ்ணா என்று மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
எழுத்து & இயக்கம் – பிரியதர்ஷன், தயாரிப்பு – ஆசிர்வாத் சினிமாஸ், தயாரிப்பாளர் – ஆண்டனி பெரும்பவூர், இணை தயாரிப்பு – DR ராய் CJ , சந்தோஷ் T.குருவில்லா, தமிழ்நாடு வெளியீடு – V கிரியேஷன்ஸ் கலைப்புலி S.தாணு, தயாரிப்பு வடிவமைப்பு – சாபு சிரில், வசனம் – RP பாலா, ஒளிப்பதிவு – திருநாவுக்கரசு, படத் தொகுப்பு – M.S.ஐயப்பன் நாயர், இசை – ரோனி நபேல், பின்னணி இசை – ராகுல் ராஜ், அன்கித் சூரி, லில் இவான்ஸ் ரோடர், நடனம் – பிருந்தா, பிரசன்னா, நிர்வாக தயாரிப்பு – சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் டயல்.
வரும் டிசம்பர் 2-ம் தேதி தமிழகமெங்கும் V கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி S.தாணு இந்தப் படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்.
இத்திரைப்படம் பற்றி கலைப்புலி S.தாணு பேசும்போது, “சிறைச்சாலை என்னும் பிரம்மாண்டமான படைப்பில் உருவான இந்த கூட்டணி, 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நம் மக்களை பிரமிக்க வைக்கும் ஒரு காவிய படைப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்..” என்றார்.