முத்து சன்னதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் ‘மல்லி.’
இந்தப் படத்தில் ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மற்றும் டெலிபோன் ராஜ், ரவிச்சந்திரன், அருண் ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு.. இவர்களுடன் வில்லனாக JVR நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு – P.K.H. தாஸ், இசை – பஷீர், பாடல்கள் – சிதம்பரநாதன், பாண்டிதுரை, படத் தொகுப்பு – B.S.வாசு, நடன இயக்கம் – நாகேந்திர பிரசாந்த், சுரேஷ், சண்டை இயக்கம் – ஸ்டன்ட் சிவு, தயாரிப்பு – ரேணுகா ஜெகதீஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வெங்கி நிலா.
‘மல்லி’ படம் பற்றி இயக்குநர் வெங்கி நிலா பேசும்போது, “பெற்றோரின் காதல் எதிர்ப்புக்கு பயந்து வீட்டை விட்டு ஓடி வரும் காதல் ஜோடி ஒரு காட்டு பங்களாவில் தங்குகிறார்கள். அவர்களுக்கு ஊரில் இருந்த நண்பர்கள் மூன்று பேர் உதவி செய்து அவர்களை ராஜா – ராணி போல் பார்த்துக் கொள்கிறார்கள்.
மர்மமான முறையில் காதலர்கள் நிஜமாகவே ராஜா, ராணி ஆகிறார்கள். அது எப்படி ஆனார்கள்..? உதவ வந்தவர்கள் யார்..? அவர்கள் யாருக்கு.? எப்படி.? அரசாட்சி செய்கிறார்கள்..? அவர்களுடைய மக்கள் யார்..? என்ற கோணத்தில் திரைக்கதை அமைந்திரு்ககிறது.
இறுதியில் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு ஊர் திரும்புகின்றனர் என்ற வினாக்களுக்கு முடிவும் படத்தில் சொல்லப்ப்டிருக்கிறது. முழுக்க முழுக்க திகிலும், காமெடியும் கலந்து வித்தியாசமான திரைக்கதையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அது ரசிகர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்.
படப்பிடிப்பு முழுவதும் வேலூர், ஏலகிரி, பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது. ‘மல்லி’ விரைவில் அனைவருக்கும் வாசம் வீச வர இருக்கிறது…” என்றார் இயக்குநர் வெங்கி நிலா.









