full screen background image

நெல்லை சுடலை மாடன் கோவில் திருவிழா பற்றிய கதைதான் ‘மாடன்’ திரைப்படம்!

நெல்லை சுடலை மாடன் கோவில் திருவிழா பற்றிய கதைதான் ‘மாடன்’ திரைப்படம்!

தெய்வா புரொடக்சன்ஸ் சார்பில் கப்பலில் கேப்டனாக பணிபுரிந்த தயாரிப்பாளர் சிவபிரகாசம் உதயசூரியன் தயாரித்துள்ள படம் ‘மாடன்’.

ந்தப் படத்தில் இளம் நாயகனாக கோகுல் கௌதம் அறிமுகமாக அவருக்கு ஜோடியாக ஷார்மிஷா நடிக்கிறார். மேலும் இதில் டாக்டர் சூரியநாராயணன், சூப்பர் குட் சுப்ரமணியம், ஸ்ரீபிரியா ஆகியோருடன், திருநங்கை ரஸ்மிதாவும் நடிக்கிறார்.

சின்ராஜ் ராம் ஒளிப்பதிவையும், விபின்.ஆர். இசையையும், ரவிசந்திரன்.ஆர். படத் தொகுப்பையும், வே. ராமசாமி, கார்த்திக் கிருஷ்ணன் பாடல்களையும், நெய்வேலி பாரதிகுமார், ஒரு பாடலையும், வசனமும் எழுதி இருக்கிறார். மாஸ்மோகன் சண்டை பயிற்சியையும், ராக்சங்கர் நடன பயிற்சியையும், குட்டி கிருஷ்ணன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.

பல குறும் படங்களை இயக்கியுள்ள இரா. தங்கபாண்டி இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தனது முதல் படமாக இயக்கியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல அழகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்த ‘மாடன்’ படம் பற்றி இயக்குநர் இரா.தங்கப்பாண்டி பேசும்போது, “இது நெல்லையில் நடந்த கள்ளமில்லா வெள்ளை உள்ளத்து காதலர்களின் கம்பீர கதை. கூடவே மதங்களைத் தாண்டிய மனிதர்களின் உணர்வால் ஊரை ஒன்றிணைத்த வல்லவனான சுடலை மாடன் கோவில் திருவிழாவின் கதையும் இணைந்துள்ளது.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு எல்லைச் சாமி உண்டு. அதற்கும் ஒரு வரலாறும் உள்ளது. அதை மக்களுக்கு பிடித்த மாதிரி திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக உருவாக்கி இருக்கிறேன்.

நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இருக்கும் சுடலை மாடன் கோவிலில் பல வருடங்களாக கோவில் திருவிழா நடைபெறாமல் இருக்கிறது அதை நடத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் கதாநாயகன் களம் இறங்குகிறான். அதனால் பல எதிர்ப்புகளை சந்திக்கிறான். தொடர்ந்து அதிர்ச்சியான சம்பவங்கள் நடைபெறுகிறது.

அவனுடைய இந்த முயற்சிக்கு அவனின் காதலியும் துணை நிற்கிறாள். இதனால் இருவருக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்படுகிறது. அந்த தடைகளை தாண்டி அவன் கோவில் திருவிழாவை நடத்தினானா? என்ற கருவை வைத்து இந்த மாடன்’ படம் உருவாகியிருக்கிறது…” என்றார்.

Our Score