யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘வல்லவன்’ படத்திற்கு ஒரு பாடல் எழுதி திரைத்துறையில் அறிமுகப்படுத்தபட்டவர் பாடாலாசிரியர் கருணாகரன்.
கார்த்தி, இயக்குனர் சுராஜ் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் கூட்டணியில் உருவான ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படத்தின் வெற்றி பாடலான ‘பேட் பாய்ஸ்’ பாடல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் வார்த்தை ஜாலத்தில் நுழைந்தார். அதனை தொடர்ந்து S.S. தமன் இசையில் ‘டமால் டுமில்’ படத்தில் உஷா உத்துப் பாடிய ‘டமால் டுமில்’ பாடல் மூலமாகவும் ஜொலித்தார்.
மேலும், அருள்நிதி நடித்த ‘தகராறு’, ‘கடவுள் பாதி மிருகம் பாதி’, ‘சேர்ந்து போலாமா’ உள்ளிட்ட பல படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். தற்போது S.S. தமன் இசையில் அருண் விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள ‘வா டீல்’ திரைப்படத்தில் ‘காதல் கலோக்கியல் அந்தரு அந்தரு’ என்ற பாடலை எழுதியுள்ளார். மேலும் திரைக்கு வரவுள்ள 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார் கருணாகரன்.
ஒரேயொரு திருப்பமே ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏணியாக இருக்கும். அது போல தனது திரையுல வாழ்க்கையை ஏற்றிவிடப் போகும் ஏணியான அந்த ஒரு பாடலுக்காக காத்திருக்கும் மணிகண்டனுக்கு நமது வாழ்த்துகள்..!