சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். அவர் மீண்டும், மீண்டும் பிரம்மாண்டமான அதேசமயம் தரமான படங்களைத் தயாரித்துள்ளார்.
அவர்களின் சமீபத்திய வெளியீடுகளின் தொடர்ச்சியான வெற்றியைத் தொடர்ந்து, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடான ‘லால் சலாம்’ திரைப்படம் தயாராகி வருகிறது.
இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். படத்தில் இருந்து மொய்தீன் பாய் அவரது கேரக்டர் போஸ்டர் பார்வையாளர்களிடமிருந்து வரவேற்பைப் பெற்று ஊடகங்களில் மிகப் பெரிய சலசலப்பை உருவாக்கியது.
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவின் பிரபாகர் படத் தொகுப்பு செய்துள்ளார். இந்த ‘லால் சலாம்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இயக்குநர் பொறுப்பேற்றுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு படத்தின் படப்பிடிப்பு துவங்கி திருவண்ணாமலையில் முதல் ஷெட்யூலை முடித்தது.
தற்போது படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது பகுதிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார்.
ஜி.கே.எம். லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் தமிழ் குமரன் மற்றும் குழு தற்போது ‘லால் சலாம்’ படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் நடிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த ‘லால் சலாம்’ திரைப்படம் 2024 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.