full screen background image

விஷ்ணு மஞ்சு-சுரபி நடிக்கும் ‘குறள்-388’ திரைப்படம்

விஷ்ணு மஞ்சு-சுரபி நடிக்கும் ‘குறள்-388’ திரைப்படம்

ராமாரீல்ஸ் தயாரிக்கும் பிரம்மாண்டமான கமர்ஷியல் திரைப்படம் ’குறள் 388’

2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ‘வோட்டர்’ என்ற படம் தற்போது தமிழில் ‘குறள்-388’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தை ராமா ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் ஜான் சுதீர் மற்றும் கிரண் தனமாலா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மூத்த மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான விஷ்ணு மஞ்சு இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதுவரையில் கவர்ச்சியில் இறங்காத சுரபி இதில் கவர்ச்சிகரமான கதாநாயகியாக களமிறங்கியுள்ளார். 

இவர்களுடன் சம்பத் குமார், நாசர், ’முனீஷ் காந்த்’ ராமதாஸ், ஜெயபிரகாஷ், பஞ்சு சுப்பு, தலைவாசல் விஜய், ப்ரகதி, சுரேகா வாணி, சனா, அஜய் ரத்னம்,  சாக்‌ஷி ஷிவா, என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான ஜி.எஸ்.கார்த்திக் இயக்கியுள்ளார்.  பிரபல பத்திரிகையாளர் இரா. ரவிஷங்கர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். எஸ்.எஸ்.தமன் இசையில் பாடல்களை விவேக் எழுதியுள்ளார். கனல் கண்ணன், ஸ்டன் சில்வா, வெங்கட் மூவரும் சண்டை இயக்கம் செய்திருக்கிறார்கள். ப்ரவீன். கே.எல். படத் தொகுப்பையும்,  ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவையும், ஸ்ரீதர், பானு நடன இயக்கத்தையும் செய்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு கேட்கிற அரசியல்வாதிகள் மக்களோட ஓட்டுப் போடும் அதிகாரத்திற்குப் பயந்து குனிந்து  கும்பிடு போடுவதும், ஜெயித்த பிறகு  அதே அரசியல்வாதிகளுடைய பதவிக்கும், அதிகாரத்திற்கும் பயந்து மக்கள் குனிந்து கும்பிடு போடுவதும் எப்போது மாறும்…?

ஓட்டுப் போட்ட பிறகு மக்கள் அனைவரும் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் அடிமையாகதான் இருக்க வேண்டுமா..?  தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல்வாதிகளை ஒன்றுமே செய்ய முடியாதா..?

இவைக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா.. என்று எண்ணும் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு ப்ராக்டீகலான தீர்வை சொல்லும்விதமாக, பவர்ஃபுல்லான    ஆக்‌ஷன் மற்றும் கலர்ஃபுல்லான காதல் கலந்த பக்காவான கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கிறது  ‘குறள் 388’ திரைப்படம்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும்.’

என்ற திருக்குறளின் 388-வது குறளை அடிப்படையாக கொண்டு, இன்றைய அரசியல் களத்தில் மக்களின் அதிகாரத்தை நிலைநாட்ட, அவசியமான  மாற்றம் ஒன்றை மக்கள் முன்வைத்து, பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் மற்றும் சிந்திக்க தூண்டும் சமாச்சாரம் என இந்த ‘குறள் 388’ திரைப்படம் உருவாகி இருக்கிறது.

அமெரிக்கா, தாய்லாந்து, சென்னை, ஹைதராபாத் என பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியிருக்கிறது ‘குறள் 388’ திரைப்படம்.

மிக விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

Our Score