full screen background image

“தலைகீழாக நிற்க வைத்து கொடுமைப்படுத்திய இயக்குநர்” – ஹீரோவின் பொறுமல்..!

“தலைகீழாக நிற்க வைத்து கொடுமைப்படுத்திய இயக்குநர்” – ஹீரோவின் பொறுமல்..!

MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B.ஜார்ஜ் இயக்கத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பால சரவணன், நரேன், முருகானந்தம்  நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படம் கூர்மன்’.

எழுத்து, இயக்கம் – பிரையன் B.ஜார்ஜ், ஒளிப்பதிவு – சக்தி அர்விந்த், இசை – டோனி பிரிட்டோ, படத் தொகுப்பு – S.தேவராஜ், கலை இயக்கம் – கருணாநிதி, ஒலி வடிவமைப்பு – தாமஸ் குரியன், சண்டை இயக்கம் – ஸ்டன்னர் ஷாம், உடை வடிவமைப்பு – டினா ரோஸாரியோ, ஒப்பனை – U.K.சசி, புகைப்படங்கள் – ஜீ.கே., மக்கள் தொடர்பு – பரணி அழகிரி, திருமுருகன், விஷுவல் எபெஃக்ட்ஸ் – R.ஜீவரத்தினம், புரொடக்சன் எக்ஸிக்யூட்டிவ் – D.நரசிம்மன், எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் – S.கணேஷ், சதீஷ் பாபு, இணை தயாரிப்பு – சுரேஷ் மாரிமுத்து, தயாரிப்பு – M.K.

அடுத்தவர்கள் மனதில் உள்ளதை  கண்டுபிடிக்கும்  ஒரு பாத்திரத்தை முதன்மை பாத்திரமாக கொண்டு இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மாறுபட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் படக் குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவினில், முதலில் படக் குழுவினர் மனதில் உள்ளதை அறியும் மெண்டலிஸ்ட் அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை, பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய டெமோவாக, பார்வையாளர்களிலிருந்தே ஒருவரை அழைத்து, மனதில் நினைப்பதை கண்டு பிடிக்கும் நிகழ்வினை  செய்து காட்டினர். இதனை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

இதனை தொடர்ந்து இப்படத்தின் மூலம் மக்கள் தொடர்பாளர்களாக அறிமுகமாகும் பரணி அழகிரி மற்றும் திருமுருகன் ஆகியோருக்கு மக்கள் தொடர்பாளர் சங்கம் சார்பாக டைமண்ட் பாபு தலைமையில் மரியாதை செய்யப்பட்டது.

விழாவில் படத்தின் நாயகனான நடிகர் ராஜாஜி பேசும்போது, “நன்றி சொல்லும் மேடையாக இதை நினைத்து கொள்கிறேன்.  தயாரிப்பாளர் தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர் அல்ல; தன்னை சுற்றியிருக்கும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

நான் நன்றாக இருக்க வேண்டுமென நினைத்துதான் இந்தக் கதையைக் கேட்டவுடன் என்னை அழைத்து நடிக்க சொன்னார். சுரேஷ் இப்படத்தில் பெரும் உதவியாக இருந்தார். இப்படத்தில் ஒரு ஜெர்மன் செப்பர்ட் நாய் நன்றாக நடித்துள்ளது. அது இப்போது இல்லை என்பதில் எனக்கு வருத்தம்தான்.

பிஜு என்னை முதலில் சந்தித்தபோது “ஆடிசன் பண்ணலாம்” என்றார். “ஒண்ணுமில்ல.. இதை செய்தால் போதும்” என்று சொல்லியே என்னைத் தலைகீழாக நிற்க வைத்தார். படத்தில் என்னிடம் நன்றாக வேலை வாங்கினார். படத்தை அருமையாகவும் எடுத்துள்ளார். இசையமைப்பாளர் டோனிஜி பின்னணி இசையில் கலக்கியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். நரேன் சார் நிறைய சொல்லிக் கொடுத்தார். பாலசரவணன் உடன் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. முருகானந்தம் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். எங்கள் படத்திற்கு நேரம் ஒதுக்கி நடித்து தந்தார். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் ஒரு தரமான படமாக இருக்கும்…” என்றார்.

Our Score