full screen background image

“ராட்சசன்’ படத்தை விற்றுத்தான் கடனை அடைத்தேன்”-விஷ்ணு விஷாலின் கண்ணீர் பேச்சு..!

“ராட்சசன்’ படத்தை விற்றுத்தான் கடனை அடைத்தேன்”-விஷ்ணு விஷாலின் கண்ணீர் பேச்சு..!

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் எஃப்.ஐ.ஆர்.(FIR)’.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இயக்குநர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பரபரப்பான கமர்ஷியல்  திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ்  இப்படத்தை வெளியிடுகிறது.

ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக் குழுவினர் நேற்றைக்கு இப்படத்தின் டிரைலரை வெளியிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளரும், நடிகருமான விஷ்ணு விஷால் பேசும்போது, “எனக்கு எமோஷனல் தருணம் இது. இந்த மேடை மிக முக்கியமான மேடை. என் அப்பா இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். எனக்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். நான் அவரது இடத்தில் இருந்தால் இது போல் செய்திருப்பேனா என்பது தெரியாது. அவருக்கு நன்றி.

நான் நடித்த சில படங்கள் தோல்வியடைந்திருக்கலாம். சிலவைகள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் நான் நடித்த படங்கள் அனைத்துமே நல்ல படங்கள்தான். எல்லா படங்களுக்குப் பின்னாலும் எனது கடின உழைப்பும், வலியும் இருக்கிறது. அதிகம் வலித்த படம் ‘காடன்’தான்.

அந்தப் படம் எனக்குத் தெலுங்கில் பெரிய இடத்தைப் பெற்றுத் தரும் என்று நம்பினேன். இதற்காகக் கடுமையாக உழைத்தேன். ஆனால், நான் நடித்த 45 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளாகவே நான் கடந்து வந்த பாதை கடினமாகத்தான் இருந்தது. சொந்த வாழ்க்கை, சினிமா இரண்டிலுமே நிறைய துன்பங்கள். 8 படங்கள் டிராப் ஆனது. கையில் காசு இல்லை. ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை விற்றுத்தான் கடன்களை அடைத்தேன்.

மனுவை சந்தித்தபோது நான் நிறைய படம் பண்ணிட்டேன். ஆனால் இன்னும் புதிதாக ஒரு நடிகராக நல்ல படம் செய்ய வேண்டும் என தோன்றியது. ‘ராட்சசன்’ படம் இந்திய அளவில் ஒரு நடிகராக ஒரு மரியாதை பெற்று தந்தது. இந்தக் கதையை இயக்குநர் மனு என்னிடம் சொன்னபோதே எனக்குப் பிடித்துவிட்டது.

எனக்கு சையத் முகமது என ஒரு நண்பர் இருந்தார். அவனுக்கு நடந்த சில விஷயங்களை சொல்லும்போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் வளர்ந்த விதம் வேறு. ஆனால் இந்தக் கதை கேட்ட போது அதை உணர்ந்தேன். இது உண்மையில் நடக்கிறதே. இதை சொல்ல வேண்டும் என தோன்றியது.

ஒரு கட்டத்தில் இந்தப் படத்தை தயாரிப்பாளரால் தயாரிக்க முடியாத சூழ்நிலையில் என்னிடம் வந்து நீங்கள் காத்திருக்க வேண்டும் என்று உண்மையை சொன்னார் மனு, அவரது நேர்மை பிடித்திருந்தது. அதனால்தான் இந்தப் படத்தை நானே தயாரித்தேன்.

இன்று 4 படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு நம்பிக்கை தந்த மனுவுக்கு நன்றி. அவர் கூட்டி வந்தவர்தான் ஷ்ரவந்தி. பேசும்போதே பாஸிட்டிவாக இருந்தார். அவர் என் தங்கையின் இடத்தை பிடித்திருக்கிறார். மனு எப்போதும் என்னை பெரிதாக யோசிக்க சொல்வார். என்னை பெரிதாக மாற்றியிருக்கிறார்.

நிறைய பேர் படம் பார்த்துவிட்டார்கள், தனுஷ் படம் பார்த்து விட்டார்.  “ராட்சசன்’ படத்தையும் தாண்டி இந்தப் படத்தில் ஒரு நடிகராக மிரட்டி விட்டீர்கள்…” என்று பாராட்டினார். ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. அதற்காக அவருக்கு நன்றி.

இந்த லாக் டவுன் நிறைய டைம் தந்தது, அதனால் எல்லோரும் மீண்டும், மீண்டும் உழைத்து அழகாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். கடந்த சில வருடங்களாக நான் அனுபவித்த துயரங்களுக்கு பரிசாக இந்தப் படம் அமைந்துள்ளதாக நினைக்கிறேன்…” என்றார்.

Our Score