full screen background image

ஜீவா, காஜல் ஜோடியாக நடிக்கும் ‘கவலை வேண்டாம்’..!

ஜீவா, காஜல் ஜோடியாக நடிக்கும் ‘கவலை வேண்டாம்’..!

வெற்றி பெறுபவர்கள் மீண்டும் இணைந்தால் வெற்றியும் தொடர்ந்து வரும் என்பதை நிரூபிக்க வருகிறது ‘கவலை வேண்டாம்’.

‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘கோ 2’, ‘யாமிருக்க பயமே’ உள்ளிட்ட  தரமான படங்களை வழங்கி வரும் ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம் தங்களது அடுத்த பிரம்மாண்டமான  தயாரிப்பான ‘கவலை வேண்டாம் ‘ படப்பிடிப்பை இந்த மாதம் 18-ம் தேதி குன்னூரில் துவக்க இருக்கின்றனர்.

‘கோ’ படம் மூலம் ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனத்தாருடன் இணைந்து பணியாற்றி பணியாற்றிய  நடிகர் ஜீவா இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். சமீபமாக ரசிகர்களின் மத்தியில் புகழின் உச்சத்தை தொடும் பாபி சிம்ஹா, ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறார். காஜல் அகர்வால், ஜீவாவுக்கு இணையாக நடிக்கிறார். மேலும், சுனைனா, ‘144’ படத்தின்  மூலம் அறிமுகமான ஸ்ருதி ராமகிருஷ்ணன், மந்த்ரா, ஆர்.ஜே.பாலாஜி, பால சரவணன், மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டி.கே., மனித உணர்வுகளின் குவியலாக இருக்கும் இந்தப் படத்தை இயக்குகிறார். ‘கோ 2’  படத்தின் இசை மூலம் ரசிகர்களின் நெஞ்சத்தைக் கவர்ந்த  லியான்  ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கே.வி.ஆனந்திடம் உதவியாளராக பணியாற்றிய அபிநாதன் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். ரூபன் ஆண்டனி படத் தொகுப்பு செய்ய, செந்தில் ராகவன் அரங்கம் அமைக்கிறார். பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ஆர் எஸ் இன்போடைன்மென்ட் சார்பில் எல்ரெட்  குமார்  தயாரிக்கிறார்.

படம் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் எல்ரெட் குமார், “இயக்குநர் டி.கே. ‘யாமிருக்க பயமே’ படம் மூலம் எங்களது நிறுவனம் மூலம் அறிமுகம் ஆனவர். அதில் எங்களுக்கு மிகுந்த பெருமை. அதை தொடர்ந்து டி.கே. தனது அடுத்த படமான ‘கவலை வேண்டாம்’ படத்தையும் எங்கள் நிறுவனத்துக்கே செய்வதில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

‘கவலை வேண்டாம்’ படத்தின் கதை இதுவரை கேட்டிராதது, பார்த்திராதது. படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனும் இந்தக் கதையில் தன்னைத்தானே பார்ப்பது நிச்சயம்.

உறவுகளும், உணர்வுகளும் எவ்வளவு முக்கியமான இடத்தை மனித வாழ்வில் இடம் பிடிக்கிறதோ, அதே அளவுக்கு ஊடலும் கூடலும் இடம் பெறுகிறது. பிரிவைத் தொடர்ந்து வரும் இணைதல்  மனிதன் உறவுகளின் பயணத்தில் முக்கியமானது. அதைத்தான் இந்தப் படம் சொல்கிறது.

இத்தகைய நுணுக்கமான மனித உணர்வுகளை பிரதிபலிப்பதற்கு சிறந்த நடிகர்கள் தேவை. அந்த வகையில் ஜீவாதான் இந்த கதாப்பாத்திரத்துக்கு மிக, மிக பொருத்தமானவர். அவர் கதைக்கு ஏற்ப, பாத்திரத்துக்கு ஏற்ற நுண்ணிய உணர்வுகளை பிரதிபலிப்பவர்.  வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்ட வேண்டும் என்று எப்போதும் விழையும் அவருக்கு இந்த ‘கவலை வேண்டாம்’ படத்தின் கதாப்பாத்திரம் மிக பொருத்தமானது. 

இந்தப் படத்தில் காஜல் அகர்வால் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க உளார். அவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். இதேபோல் எங்களது தயாரிப்பில் பாபி  சிம்ஹா நடிப்பது இதுவே முதல் முறை.

எங்களது நிறுவனத்தில் தயாரித்த வெற்றி படங்களின்  முக்கியக் காரணங்களான  ஜீவா மற்றும் டி.கே. ஆகிய இருவருடனும் மீண்டும் இணைந்துப் பணியாற்றுவதில் எங்களுக்கு மிகுந்த பெருமை.

திறமைகளின் சங்கமமாக இருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம் வர்த்தகர்களின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும்..” என்றார்.

Our Score