full screen background image

புதிய வகை காதலைச் சொல்ல வரும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம்

புதிய வகை காதலைச் சொல்ல வரும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம்

மலையாளத்தில் பல  வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்து சாதனை படைத்த நிறுவனமான ஆண்டோ ஜோஸப் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.

இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் துல்கர் சல்மானின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பத்மாவத்’, ‘அந்தாதுன்’, ‘பாக் மில்கா பாக்’ போன்ற மிகப் பெரிய மற்றும் கதையம்சம் கொண்ட படங்கள் மூலம் இந்திய சினிமாவை மறுவரையறை செய்த இந்தியாவின் பிரீமியர் கண்டெண்ட் ஸ்டுடியோ வையாகாம் 18 ஸ்டுடியோஸ், ‘தேவதாசா’ (தெலுங்கு) மற்றும் ‘கோடத்தி சமக்ஷம் பாலன் வகீல்’ (மலையாளம்) ஆகிய சினிமாக்கள் மூலம் பிராந்திய மொழி சினிமாவில் அடியெடுத்து வைத்தது.

இப்போது வையாகாம் 18 மற்றும் ஆண்டோ ஜோஸப் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ மூலம் தமிழ் சினிமாவில் தங்களின் வருகையை அறிவிக்கிறது.

Ajit-Andhare-1

வையாகாம் 18 ஸ்டுடியோஸின் தலைமை செயல் அதிகாரியான அஜித் அந்தரே இது பற்றிக் கூறும்போது, “ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, மொழிகளை தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய கதைகளைச் சொல்வதைவிட திருப்திகரமான எதுவும் இல்லை.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வழங்கப்படும் கதைகளை கண்டு நான் எப்போதுமே ஈர்க்கப்பட்டிருக்கிறேன். ஆண்டோ ஜோஸப்புடன் இணைந்து நாங்கள் தயாரிக்கும் இந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்தில் இது போன்ற பல சிறந்த திரைப்படங்களை இந்த நிறுவனத்தில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கலாம்..” என்றார்.

anto-joseph-1

தயாரிப்பாளர், ஆண்டோ ஜோஸப் கூறும்போது, “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ போன்ற ஒரு படத்தை தயாரித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இது வையாகாம் 18 ஸ்டுடியோஸ் உடன் எனது முதல் திரைப்படம். அதேபோல் மூன்றாவது முறையாக நான் துல்கர் சல்மானுடன் பணிபுரிகிறேன். இந்தக் கதைக்கு இதைவிடவும் ஒரு சிறந்த கூட்டணி வேறெதுவும் இருக்க வாய்ப்பில்லை..” என்றார்.

director desing periyasamy

இயக்குநர் தேசிங் பெரியசாமி கூறும்போது, “எனது முதல் படம் இந்தியாவின் முன்னணி ஸ்டுடியோக்களில் ஒன்றான வையாகாம் 18 ஸ்டுடியோஸால் வெளியிடப்படுவது என் கனவு நனவான தருணம்.

இத்திரைப்படத்தை தயாரித்த ஆண்டோ ஜோஸப் ஃபிலிம் நிறுவனத்துக்கும், அதை மேலும் உயர்த்திய வையாகாம் 18 ஸ்டுடியோவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மிகவும் ரசிக்கப்படக் கூடிய ஒரு ஜாலியான இந்த படம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.

Dulquer-Salman-Photo-1

இந்தப் படம் குறித்து நாயகன் துல்கர் சல்மான் கூறும்போது, “இந்தக் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஒரு சுவாரஸ்யமான கதை. இது போன்ற அருமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எனது 25 வது படம் என்பது என்னை மேலும் சிறப்பாக உணர வைக்கிறது.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்துக்காக வையாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோஸப் ஆகியோருடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் படம் சொல்லும் காதலை பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்…” என்றார்.

Our Score