full screen background image

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதிய படம் ‘பொன்மகள் வந்தாள்!’

ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதிய படம் ‘பொன்மகள் வந்தாள்!’

தரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில்  இயக்குநர் மற்றும் நடிகர்களான பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன்  ஆகிய மூவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். பிரதாப் போத்தனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

‘பொன்மகள் வந்தாள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எழுதி இயக்குபவர் ஜே.ஜே.பிரட்ரிக்,  இவருக்கு இது முதல் படமாகும்.

எல்லோராலும் ரசித்துக் கொண்டாடக் கூடிய கதைகளில் ஜோதிகா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதால் இப்படத்தின் கதையையும் மிகச் சிறப்பாக இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் உருவாக்கி இருக்கிறாராம்.

தன் கேமரா கண்கள் மூலம் ரசிகர்களின் கண்களுக்கு  விருந்தளிக்கும் ராம்ஜி இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இன்று தமிழ்நாட்டு ரசிகர்களின் செவிகளை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தாதான் இப்படத்தின் இசை அமைப்பாளர். படத் தொகுப்பாளராக ரூபனும், கலை இயக்குநராக அமரனும் பொறுப்பேற்றுள்ளனர் .

pon magal vanthaal movie poojai

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் படத்தின் பூஜை இன்று காலையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

இந்த பூஜை நிகழ்ச்சியில் மூத்த நடிகர்  சிவக்குமார்,   2-D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும், தயாரிப்பாளருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள், ஹரி, பிரம்மா, முத்தையா, T.J.ஞானவேல், 2-D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, விநியோகஸ்தர் B.சக்திவேலன்  ஆகியோரும், படத்தின் நட்சத்திரங்களான ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் மற்றும் படத்தின் இயக்குநர் பிரட்ரிக் உள்பட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Our Score