ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Squar Studios) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்குகிறார். இணை தயாரிப்பாளர் டிக்கிம் சன்ஞ்.
காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு, வேதிகா, சாந்தினி, இனிகோ பிரபாகர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு கோபி துரைசாமி மற்றும் வினோத்.ஜே.பி. ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கே.எம்.ரியாஷ் படத் தொகுப்பு செய்ய, சீனிவாசன் சங்கர் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். நைஃப் நரேன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். கபிலன் மற்றும் கானா சல்லு பாடல்கள் எழுத, நிசார் கான் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
ஜோதிகா நடித்த ’ராட்சசி’ பட இயக்குநர் சை.கெளதம் ராஜ் திரைக்கதை, வசனம் எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்கியிருக்கிறார்.
தமிழகம் முழுவதும் இந்தப் படத்தை டி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான திருமலை வெளியிட்டுள்ளார்.
இது இந்து தொன்மவியல் அடிப்படையில் புராணக் கதைகளின் வழியில் கர்ண பரம்பரை கதையாக சொல்லப்பட்ட ஒரு புதையலைத் தேடி அலையும் மனிதர்களின் கதை..!
முதலில் அந்த புராணக் கதை என்ன என்பதை பார்ப்போம்.
இந்து மதத்தின் தொன்மவியல் அடிப்படையில் இந்து மதத்தை பிரஸ்தாபித்த பிரஜாபதிகளில் ஒருவர் காசியபர் முனிவர்.
இவர் மரீசை முனிவரின் புதல்வர் ஆவார். காசியபர் ஆயுர்வேத அறிவைப் பெற்றவராகவும், ஆயுர்வேத மருத்துவத்தின் ஒரு முக்கிய முன்னோடியாகவும் கருதப்படுகிறார்.
ஒரு காலத்தில் வட இந்தியாவில் உள்ள ஏரியை காசியபர் வடிகட்டினார். அந்த பகுதி காஷ்யபமிர் என்று அழைக்கப்பட்டது, அது இன்று காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது.
இவர் தர்ஷன் என்ற மற்றொரு பிரஜாபதி முனிவரின் 13 மகள்களை மணந்தவர். அதிதி, திதி, தனவோ, சத்ரு, வினதா, முனி, அரிட்டை, சுரசை, சுரபி, தாம்ரா, குரோதவசை மற்றும் விஷ்வா ஆகிய 13 தட்சனின் மகள்களை மணந்து கொண்டவர்.
இது மட்டுமல்லாமல் இன்னமும் கூடுதலாக பதங்கி, யாமினி ஆகிய பெண்களையும் மணந்து கொண்டார்.
காசியபருக்கும் அதிதிக்கும் இந்திரன், அக்கினி போன்ற தேவர்கள், ஆதித்தர்கள் மற்றும் வாமனர், பூமாதேவி ஆகியோர் பிறந்தனர்.
காசியவருக்கும் திதிக்கும் மருத்துக்கள், தைத்தியர்கள், இரணியாட்சன், இரண்யகசிபு ஆகியோர் பிறந்தார்கள்
காசியவருக்கும் தணுவுக்கும் தானவர்கள் பிறந்தார்கள்.
காசியபருக்கும் முனிக்கும் அரம்பையர்கள் பிறந்தார்கள்.
காசியவரின் மனைவிகளில் கத்ருவும், வினதாவும் சகோதரிகளாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் பொறாமை கண்டு எதிரிகளாகவே வாழ்ந்து வந்தார்கள்.
இந்த நேரத்தில் காசியபருக்கும் கத்ருவுக்கும் நவநாகங்கள் மற்றும் நாகர்கள் 100 பேர் பிறந்தார்கள்.
இதைப் பார்த்து பொறாமைப்பட்ட காசியபரின் இன்னொரு மனைவியான வினதா சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்து நாகர்களை வெல்லக் கூடிய வலிமை வாய்ந்த அருணன், கருடன் ஆகியவர்களை பெற்றெடுத்தார்.
நாகர்கள் சிவபெருமானின் தலையில் குடியமர்ந்தார்கள். இதை பார்த்து கருடன் பரம்பரையினர் பொறாமையும் கோபமும் கொண்டனர் அதோடு சிவபெருமான் நவரத்தினக் கல் என்ற விலை மதிப்பில்லாத மிகப் பெரிய ஆற்றல் மிக்க ஒரு பரிசினை நாகர்களுக்கு வழங்கினார்.
இதையெல்லாம் பார்த்த கருடன் பரம்பரையினர் நாகர்கள் மீது கோபம் கொண்டு அவர்கள் மீது போர் தொடுத்தார்கள். கருடன் நாகத்தைவிடவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால் நாகர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போனது.
இந்த நேரத்தில் அவர்களுக்கும், கருடன் பரம்பரையினருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை தொட நாகர்கள் தங்களிடம் இருந்த நவரத்தினக கல் உள்ளிட்ட மிகப் பெரிய செல்வங்களை எல்லாம் தங்களுடைய நாகமலை என்கின்ற காட்டுப் பகுதியில் புதைத்து வைத்து அந்த இடத்தை தோண்டி எடுக்கும் சக்தி வாய்ந்த வேலை அந்தப் பகுதியை ஆண்டு வந்த பாணர்கள் என்ற வம்ச பரம்பரையின் அரசர்களிடம் ஒப்படைத்தார்கள்.
அந்த பாணர்கள் வம்சத்தில் கடைசியாக ஆண்டு வந்தவர் வீரபுத்திரன் என்ற அரசன். இவனுடைய கடைசி காலத்தில்தான் இந்தியாவில் பிரிட்டிஷ் படைகளும், பிரெஞ்சுப் படைகளும் போர்ச்சுகீசிய படைகளும் நுழைந்தன. இந்த மும்முனை போரில் நாகமலை ஆங்கிலேயர், பிரஞ்சுகாரர்கள் இருவரின் கைகளிலும் மாறி, மாறி வீழ்ந்தது.
கடைசியாக அந்த நாகர்களுக்கு சொந்தமான புதையல் இருக்கும் இடம் நாகமலையின் ஏதோ ஓரிடத்தில் ஒரு ஒற்றை மரத்தின் அருகே இருக்கிறது என்கின்ற கதை, வழி வழியாக வந்த கர்ணப் பரம்பரை கதையில் சொல்லப்பட்டு இப்போதுவரையிலும் நிலைத்துவிட்டது.
இதுதான் அந்தப் புதையலின் கர்ண பரம்பரை கதை.
இப்பொழுது அந்த நாகமலையில் அந்த ஒற்றை மரம் இருக்கின்ற இடத்தில் புதையல் பூமிக்கு அடியில் அமிழ்ந்துள்ளது. அந்த இடத்தைச் சுற்றிலும் நாகர்கள் பாதுகாத்து வருகிறார்கள். அதோடு கருடர்களும் அந்த புதையலை எடுக்க வேண்டும் என்பதற்காக அந்த நாகமலையைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஒரு புதையல் இருப்பதை அறிந்த மனிதர்கள் பலரும் அந்த புதையலைத் தேடி அந்தக் காட்டுக்குள் நுழைய.. கடைசியில் அப்படி நுழைந்தவர்கள் ஒருவர்கூட உயிருடன் திரும்பி வரவே இல்லை என்பது மட்டும் உறுதியானது.
ஒன்று நாகர்களால் அவர்கள் கொல்லப்பட்டார்கள். அல்லது கருடர்களால் கொல்லப்பட்டார்கள். இப்படி எந்த மனிதனுமே நாகமலை காடுகளுக்குள் உள்ளே போய் உயிரோடு திரும்பி வந்ததாக சரித்திரம் இல்லை.
சென்னையில் வசித்து வரும் வரலாற்று பேராசிரியர் ஹரிஷ் பேராடி இது பற்றிய பல தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார். அவரை தேடி வரும் வேதிகா அவர் கடைசியாக அந்தப் புதையலை தேடிப் போன ஒரு குழுவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருந்தும் அதை வெளியிடாமல் வைத்திருப்பதால் அதில் ஏதோ ரகசியம் இருப்பதாக சொல்லி அவரிடத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
இதனால் ஹரிஷ் பேரடி இந்த புதையலை தேடிச் சென்றவர்களின் கதையை வேதிகாவிடம் சொல்கிறார். அந்தக் கதையின்படி வரலாற்று பேராசிரியரான பிரதாப் போத்தனிடம் அந்த புதையல் இருக்கும் இடம் குறித்த செய்தியின் ஒரு பகுதியை ஒரு ஓலைச் சுவடியாக வைத்திருக்கிறார்.
இன்னொரு ஓலைச்சுவடியை மற்றொரு பேராசிரியரின் மகனான இனிகோ பிரபாகர் கொண்டு வந்து தருகிறார். இப்போது இரண்டு ஓலைச் சுவடிகள் கைக்கு கிடைத்துவிட மூன்றாவது ஓலைச் சாவடியைத் தேடி கிளம்புகிறார் இனிகோ பிரபாகர்.
தனக்கென்று ஒரு தனியாக ஒரு குழுவை அமைத்து தேடுவதற்காக அனுப்புகிறார் இனிகோ. இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் கொண்ட அந்தக் குழுவுக்கு மற்றொரு ஆதிவாசி ஒருவரும் வழிகாட்ட அவர்கள் நாகமலையின் காடுகளுக்குள் செல்கிறார்கள். பின்னாடியே இனிகோ பிரபாகரன் அவர்களை தேடி வருகிறார்.
இவர்கள் அந்தப் புதையலை கிட்டத்தட்ட நெருங்கிய இடத்தில் வேலு பிரபாகரன் இவர்களை எதிர்கொண்டு “இந்த இடத்தில் நீங்கள் இருப்பது ஆபத்து திரும்பி சென்று விடுங்கள். அந்த புதையலை யாராலும் எடுக்க முடியாது…” என்று சவால் விடுகிறார்.
ஆனால் உண்மையில் மூன்றாவது துண்டு ஓலைச்சுவடி வேலு பிரபாகரனிடம் இருப்பதை அறிந்த இனிகோ பிரபாகர் வேலு பிரபாகரனை கொலை செய்துவிட்டு அந்த மூன்றாவது ஓலைச்சுவடியை எடுத்துக் கொண்டு புதையலைத் தேடிச் செல்ல நினைக்கிறார்.
இதில் பல்வேறு தடங்கல்கள் அவருக்கு ஏற்படுகிறது.. அது என்ன தடங்கல்கள்.. அது மூன்றாவது உழைச்சு உடையவர் கைப்பற்றினாரா? புதையலைத் தேடி எடுத்தார்களா.. அந்தக் காட்டுக்குள் அவர்கள் சந்தித்த எதிர்ப்புகள் என்ன.. பயங்கரங்கள் என்ன.. நாகர்களும், கருடன்களும் இவர்களை சும்மா விட்டார்களா?.. என்கின்ற கேள்விகளுக்கான விடையை தியேட்டருக்கு சென்று இந்த படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
புதையல், அமானுஷ்யம், மந்திரம், தந்திரம், சஸ்பென்ஸ், திரில்லர், புராணக் கதைகள் கருடர்கள், நாகர்கள் என்று ஒரு பேண்டஸி திரைப்படமாக இந்தப் படத்தை இயக்குநர் கொடுத்திருப்பதால் இயக்கம் என்பதற்கும் நடிப்பு என்பதற்கும் ரொம்பவும் மெனக்கடவில்லை.
இயக்குநர் தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை நடிகர்களிடமிருந்து வரவழைத்திருக்கிறார். நடிகர்களும், இயக்குநர் என எதிர்பார்த்தாரோ அதை மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.
பிரதாப் போத்தனும், ஹரிஷ் பேரடியும் தங்களால் முடிந்த அளவுக்கான ஒரு பெஸ்டான நடிப்பினை வழங்கி இருக்கிறார்கள். அனுபவ சாலியான ஹரிஷ் போராடி வேதிகாவை சமாளிக்கும் விதமும் கடைசியாக அவர் தன்னை யார் என்று காட்டுகின்றவிதமாக அவருடைய சில செயல்பாடுகளும், நடிப்பும் கொஞ்சம் சஸ்பென்ஸ் வைத்து திரைக்கதையில் எதிர்பார்ப்பையும், விறுவிறுப்பையும் கூட்டி இருக்கிறது.
பிரதப் போத்தன் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் ஒரு நல்ல நடிகர், பண்பட்ட நடிகர் விரைவில் விடை பெற்றுவிட்டாரே என்ற வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்.
படத்தை துவக்கி வைக்கும் வேதிகா இறுதிக் காட்சிவரையிலும் அவ்வப்பொழுது வந்து தலையை காட்டி படத்தின் திரைக்கதையை நமக்கு திரையில் விவரித்து காட்டுகிறார்.
படத்தின் நாயகனான இனிகோ பிரபாகர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அதே சமயம் கொஞ்சம் சிரமமும்படாமல் இயக்குநர் என்ன கேட்டாரோ அந்த நடிப்பை மட்டுமே காண்பித்து விட்டு கடைசி வரையிலும் படத்தில் உயிருடன் இருந்து சாதித்து இருக்கிறார்.
இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என்ற அந்த குழுவினரும் தங்களுடைய மென்மையான நடிப்பை காண்பித்து இருக்கிறார்கள். அவர்களுடன் வழிகாட்டியாக வந்த இந்த மலைவாழ் மனிதரும் ஒரு சிறப்பான நடிப்பை காண்பித்து இருக்கிறார்.
கருட பரம்பரை ராணியாக வந்திருக்கும் சாந்தினியும் ஒரு கவன ஈர்ப்பு போலவே நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார். அவருடன் வந்தவர்களும் பரவாயில்லை ரகம்தான்.
படத்தில் மொத்தமாக வீணான விஷயம் யோகிபாபுவும், மொட்டை ராஜேந்திரனும்தான். இவர்களை வைத்து எடுக்கப்பட்ட கதையும், திரைக்கதையும் சுத்தமாக வேஸ்ட். எதற்குமே பயன்படவில்லை..!
நடிப்பெல்லாம் இரண்டாம் பட்சமாக வைத்துக் கொள்வோம். இந்தப் படத்தில் நாயகன் யார் என்று கேட்டால் அது, வி.எப்.எக்ஸ். கிராபிக்ஸ் அனிமேஷன்தான் என்று இயக்குநர் முன்பேயே தெளிவாக சொல்லி இருந்தார்.
அதுபோலவே வி.எஃப்.எக்ஸ். கிராபிக்ஸ் அனிமேஷன்தான் இந்தப் படத்தின் இடைவேளைக்கு பின்பான படத்திலே தூக்கிப் பிடித்திருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சிகளில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் பரவாயில்லை என்ற ரகம். இத்தனை சின்ன பட்ஜெட்டில் இந்த அளவுக்குக் கொண்டு வந்ததே பெரிய விஷயம்தான். பாராட்டுக்கள்!
யாளி என்கின்ற யானை தலையுடனும், சிங்க உருவத்துடனும் இருக்கின்ற அந்த மிருகத்தை ஓரளவுக்கு சிறு குழந்தைகள் ஆர்வத்துடன் பார்க்கின்ற வகையில் வி.எப்.எக்ஸ். செய்து கொடுத்திருக்கிறார்கள். இதை வடிவமைத்த கிராபிக்ஸ் வல்லுனர்களுக்கு நமது பாராட்டுக்கள்.
இசையமைப்பாளர் கடைசிவரையிலும் ஆக்ரோசமாகவே கீ போர்டை தொட்டு விளையாடி இருக்கிறார் போலும்..! அவ்வளவு ஓவரான ஒலி நம் காதைத் தொலைத்து இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் காட்டுப் பகுதிக்குள் தன்னால் முடிந்த அளவுக்கான திறனை காட்டி இருக்கிறார். ஆனால் இயக்குதலில் இருக்கும் போதாமையும் திரைக்கதையில் இருக்கும் சுவாரஸ்யம் இல்லாத தன்மையினாலும் பல காட்சிகள் மெதுவாக நகருகின்ற ஒரு தோற்றத்தினாலும் ஒளிப்பதிவை நம்மால் நன்கு உணர முடியவில்லை.
பல இடங்களில் காட்சியின் கோணங்கள் ஒருவித மந்த நிலையே தொட்டிருப்பது வருத்தத்திற்குரியது. கிராபிக்ஸ் அனிமேஷன், வி.எஃப்.எக்ஸ். இதையெல்லாம் கொஞ்சம் சிறப்பாகவே செய்திருக்கும் இயக்குநர் இயக்குதலை இன்னும் கொஞ்சம் திறம்பட செய்திருந்தால் இந்தப் படம் நம் மனதில் நின்றிருக்கும்.
ஆனால் இது குழந்தைகளுக்கான திரைப்படம் என்று சொல்லி யாளி விலங்கினை வைத்து கிராபிக்ஸ் அனிமேஷன் மற்ற தொழில் நுட்ப வித்தையையும் சேர்த்து இந்தப் படத்தை வேகம் வேகமாக நகர்த்தி இருப்பதால் தியேட்டரில் நிச்சயமாக குழந்தைகளோடு குதூகலமாகப் பார்த்து மகிழலாம்..!
RATING : 3.5 / 5