நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘கடமையை செய்.’
பல வெற்றிப் படங்களை இயக்கியதோடு தற்போது பிரபல நடிகராகவும் உள்ள இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். மற்றும் ‘மொட்டை’ ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள்.
இயக்குநர் சுந்தர்.C தயாரித்து, நாயகனாக நடித்த ‘முத்தின கத்திரிக்கா’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய வெங்கட்ராகவன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
ஒளிப்பதிவு – வினோத் ரத்னசாமி, இசை – அருண்ராஜ், கலை இயக்கம் – M.G.முருகன், படத் தொகுப்பு – N.B.ஸ்ரீகாந்த், சண்டை இயக்கம் – பிரதீப் தினேஷ், நடன இயக்கம் – தீனா, சாய் பாரதி, தயாரிப்பு மேற்பார்வை – R.P.வெங்கட், தயாரிப்பு – T.R.ரமேஷ், ஜாகிர் உசைன், மக்கள் தொடர்பு – மதுரை செல்வம், மணவை புவன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் துவங்கியது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.