full screen background image

‘ஜருகண்டி’ படத்தில் ஒளிப்பதிவாளர் திடீர் மாற்றம்..!

‘ஜருகண்டி’ படத்தில் ஒளிப்பதிவாளர் திடீர் மாற்றம்..!

நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது சொந்த பட நிறுவனமான shvedh  மூலம்  ‘ஜருகண்டி’ என்கிற திரைப்படத்தை தயாரிக்கிறார் என்பது தெரிந்ததே.

ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் ரெபா மோனிகா ஜான். அமித் குமார் திவாரி வில்லனாக நடிக்க அவருடன் ரோபோ ஷங்கர், இளவரசு, காவ்யா ஷா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இளம் இசை அமைப்பாளர் போபோ சஷி இசை அமைக்க, கே.எல்.பிரவீனின் படத் தொகுப்பில், இந்த படத்தை இணைந்து தயாரிப்பவர் Shraddha entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளரான பத்ரி கஸ்தூரி.

இந்தப் படத்திற்கு ஏற்கெனவே ஒளிப்பதிவு செய்து வந்த ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா திடீரென்று இந்தப் படத்தில் இருந்து விலகியதால், இப்போது அவருக்கு பதிலாக பிரபல ஒளிப்பதிவாளரான ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு  செய்து வருகிறார். 

“திட்டமிட்டபடியே எங்கள் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. எங்களது படப்பிடிப்பு குழுவில் புதிதாக இணைந்துள்ள ஒளிப்பதிவு இயக்குநர் ஆர்.டி.ராஜசேகரின் அனுபவமும், திறமையும் எங்களை போன்ற இளைஞர்களை  ஊக்குவிக்கும். அவரது தொழில் நுட்பம் உலக தரத்துக்கு இணையானது. அதுவே எங்களுக்கு பெருமை..” என்கிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.

Our Score