மில்லியன் டாலர் மூவிஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் K.கார்த்திகேயன் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறார்.
S.D.விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘கோலி சோடா-2’ படத்திலும், இயக்குநர் சமூத்திரக்கனி – சசிகுமார் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ‘நாடோடிகள்-2’ படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ள நடிகர் இசக்கி பரத் இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.
முன்னனி கதாநாயகிகளுள் ஒருவர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
மேலும், ‘இளைய திலகம்’ பிரபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இயக்குநர் விக்ரமனிடம் பல படங்களில் துணை, இணை இயக்குநராகப் பணியாற்றியவரும், ‘கோலி சோடா-2’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவருமான ராமகிருஷ்ணன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
தயாரிப்பு – K.கார்த்திக்கேயன், கதை திரைக்கதை வசனம் இயக்கம் – ராமகிருஷ்ணன், ஒளிப்பதிவு – பாண்டி குமார், இசை – அச்சு ராஜாமணி, படத் தொகுப்பு – தீபக், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு நிர்வாகி – சசி, இணை தயாரிப்பு – S.இசக்கி கிஷோர்.
இப்படத்தின் படப்பிடிப்பினை முன்னாள் தமிழக சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா கிளாப் அடித்து துவக்கி வைத்தார். சிவாஜி பிலிம்ஸ் குமார் கேமராவை ஆன் செய்து வைத்தார். இயக்குநர் பாலாஜி சக்திவேல் இப்படத்தின் முதல் காட்சியை படமாக்கினார்.
தற்போது இந்தப் படத்திற்காக சென்னை கடற்கரை அருகே பிரம்மாண்டமான செலவில் ஒரு ரெஸ்ட்டாரண்ட் அரங்கம் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.