full screen background image

‘ஹாஸ்டல்’ – மலையாள ஒரிஜினலைவிடவும் தமிழ் ரீமேக் சிறப்பாக இருக்குமாம்..!

‘ஹாஸ்டல்’ – மலையாள ஒரிஜினலைவிடவும் தமிழ் ரீமேக் சிறப்பாக இருக்குமாம்..!

Trident Arts நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குர் சுமந்த் ராதாகிருஷ்ணனின் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், நாசர், முனீஸ்காந்த் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ஹாஸ்டல்’.

இத்திரைப்படம் 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அடி கப்பியாரே கூட்டமணி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காகும். 

அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இப்படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி, படக் குழுவினர் நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.  

இவ்விழாவில், இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் பேசும்போது, “எனது முந்தைய படத்திற்கு நல்ல ஆதரவை தந்தீர்கள். இப்போது ஒரு பெரிய டீமுடன் வந்துள்ளேன்.

அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படம் எங்களுக்கு பிடித்துள்ளது. இது ஒரு சிம்பிளான படம். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்..” என்றார்.

நடிகர் ரவி மரியா பேசும்போது, “இந்தப் படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது, 3 வருடங்களில் ஹாஸ்டலில் தங்கி படித்த அனுபவங்களை எல்லாம் கொட்டி தீர்த்து விடலாம் என்று நினைத்துதான் ஷூட்டிங்கிற்குப் போனேன். அங்கே போனால் “நான் பிரியா பவானி சங்கருக்கு அப்பா..” என்று சொல்லிவிட்டார்கள். “சரி.. பிரியாவுடனாச்சும் நடிக்கலாமே” என்று ஓகே சொல்லிவிட்டேன்.

இயக்குநர் மிக தெளிவானவர். ரீமேக் படத்தை கெடுக்காமல் அவருக்கு என்ன தேவை என்பதை சரியாக சொல்லி வேலை வாங்கி விட்டார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக வடிவமைத்துள்ளார். மலையாளப் படத்தை மிஞ்சும் வகையில் படத்தை எடுத்துள்ளார். அசோக் செல்வன் மிக நன்றாக நடித்துள்ளார். அவர் மிக எளிமையானவர்.

காமெடிதான் மனிதர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தருகிறது. அதனால் காமெடி படங்களுக்கு மரியாதை தாருங்கள்..” என்றார்.

நடிகை பிரியா பவானி சங்கர் பேசும்போது, “இது போன்ற ஒரு குழுவுடன் இணைந்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. அசோக் செல்வன், சதீஷ் மற்றும்  மற்ற நடிகர்களுடன் நடித்தது அற்புதமாக அனுபவமாக இருந்தது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் சிரமமின்றி மிகவும் எளிதாக நடந்தது. அதற்கு காரணமான தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு ஆயிரம் நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்,

இந்தப் படத்தை  ஒளிப்பதிவாளர் பிரவீன் சார் மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார். மேலும் போபோ சசி அழகான பாடல்களை கொடுத்துள்ளார்.

நாசர் சாருடன் முதல்முறையாகப் பணி புரிந்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் அவருடன் ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் நடித்துள்ளேன். ஆனால், மேலும் அவருடன் இணைந்து இரண்டு படங்களில் நடிக்கப் போகிறேன்.

எங்கள் அனைவரையும் ஒன்றிணைத்த இயக்குர் சுமந்த் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த ஹாஸ்டல்’ படம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த படமாக இருக்கும். சதீஷுடைய அடுத்தடுத்த படங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அசோக் செல்வன் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவருடைய கடின உழைப்பு அவரை மிகப் பெரும் உயரத்திற்கு கொண்டு செல்லும்…” என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசும்போது, “எனது அனைத்து திரைப்படங்களுக்கும் ஆதரவளித்த ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. இந்த திரைப்படம் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு நன்றி.

ஆரம்பத்தில், இந்த திரைப்படத்தில் நடிக்க எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் சுமந்த் படத்தின் சாராம்சத்தை மட்டும் எடுத்துவிட்டு ஸ்கிரிப்டை முழுவதுமாக மாற்றியிருந்தார். பிரியா நன்றாக நடித்துள்ளார். அவர் சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நடிகையாகிவிட்டார். சதீஷ் தனித்துவமான ஸ்கிரிப்ட்களுடன் முன்னணி பாத்திரத்தில் நடித்து, பெரிய உயரங்களை எட்டத் தொடங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

க்ரிஷ் மற்றும் யோகி இருவரும் ‘ஹாஸ்டல்’ போன்ற இந்த நல்ல திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதற்கு நன்றி. நாசர் சார் எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போன்றவர். அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முனிஸ்காந்த், ரவி மரியா சார், அறந்தாங்கி நிஷா மற்றும் ஏனைய நடிகர்கள் அவர்களது பணியை சிறப்புடன் ஆற்றியுள்ளனர்.

ரவி மரியா சார் சொன்னது போல, நகைச்சுவை ஒரு சீரியஸ் பிசினஸ். நாங்கள் அதை முழு மனதுடன் செய்ய முயற்சித்தோம். அவர் கூறியது போல், அனைவரும் அனுபவித்து பாராட்ட வேண்டும். அனைவரும் திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.

Our Score