full screen background image

நாளை ஓடிடியில் வெளியாகும் லெஸ்பியன் படம் ‘ஹோலி வுண்ட்’

நாளை ஓடிடியில் வெளியாகும் லெஸ்பியன் படம் ‘ஹோலி வுண்ட்’

சமீப காலமாக இந்தியாவில் LGBTQ கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இத்திரைப்படங்கள் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரு நபர்களுக்கு இடையிலான உறவு சிக்கலை சித்தரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அப்படியொரு படமாக நாளை OTT-யில் வெளியாகவுள்ளது ஹோலி வுண்ட்’ என்ற மலையாளத் திரைப்படம். இத்திரைப்படம் மவுனப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜானகி சுதீர், அம்ரிதா வினோத் மற்றும் சாபு பிரவுதீன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Sahasrara Cinema Pvt Ltd வழங்க, R சந்தீப் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ரோனி ரஃபேலின் இசையமைக்க, உன்னி மடவூரின் ஒளிப்பதிவு செய்துள்ளார். விபின் மன்னூர் படத் தொகுப்பு செய்துள்ளார்.

அசோக் R.நாத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதையை பால் விக்லிஃப் எழுதியுள்ளார்.

இந்த ஹோலி வுண்ட்’ படம் பெண் ஓரினச் சேர்க்கை உறவை சுற்றி அமைக்கப்பட்ட டிராமா திரைப்படமாகும்.

சிறு வயதில் அன்பாக வளர்ந்த இரண்டு சிறுமிகள் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்து, உடலாலும் உள்ளத்தாலும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

எரோடிக் டிராமாவான இந்த ஹோலி வுண்ட்’ படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படம் நாளை ஆகஸ்ட் 12, SS Frames OTT தளத்தில் நேரடியாக திரையிடப்படுகிறது.

Our Score