அனல் பறக்கும் ஆக்சன் படங்களை இயக்குவதில் கை தேர்ந்தவர் இயக்குநர் A. வெங்கடேஷ்.
இவர் இதுவரையிலும், ‘மகாபிரபு’, ‘பகவதி’, ‘ஏய்’, ‘தம்’, ‘குத்து’, ‘துரை’, ‘மலை மலை’ ‘சண்டமாருதம்’ என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
செண்டிமெண்ட், காதல், நகைச்சுவை ஆக்சன் கலந்து ஒரு ஜனரஞ்சக சினிமா எடுப்பதில் முன்னோடியாய் திகழ்ந்து வருகிறார். இப்போது முதன்முறையாக முழுக்க, முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொண்ட ‘ரொம்ப நல்லவன்டா நீ’ படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தை ராண்டேவோ மூவி மேக்கர்ஸ் சார்பில் தீபக் குமார் நாயர் தயாரித்திருக்கிறார். நாயகனாக மிர்ச்சி செந்தில், கதாநாயகியாக சுருதி பாலா நடித்திருக்கிறார்கள்.
முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க வில்லனாக எத்தன் புகழ் ‘ சர்வஜித்’ நடித்திக்கிறார். முன் பின் தெரியாத இரு நபர்களின் நட்பும், அதை தொடர்ந்து வரும் சம்பவங்களின் தொகுப்பே இந்த ‘ரொம்ப நல்லவன்டா நீ’ திரைப்படம்.
“எனக்கும் நகைச்சுவைக்கும் உள்ள நட்பு அதீதமானது. காதல் படமோ, ஆக்சன் படமோ நகைச்சுவை இல்லாமல் நான் படமெடுக்கவே மாட்டேன். இருந்தாலும் இப்போது இப்படியொரு முழு நீள காமெடி படத்தை இயக்கியது எனக்கொரு புதிய அனுபவமாக இருந்தது. மிர்ச்சி செந்தில் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கணகச்சிதமாக செய்து முடித்தார். அறிமுக நாயகி ஸ்ருதி பாலா மற்றும் ரோபோ சங்கர் இருவரும் நான் நினைத்ததைவிடவும் மிக அழகாக நடித்துள்ளனர்..” என்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ்.