full screen background image

ஆக்சன் பட இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கும் ‘ரொம்ப நல்லவன்டா நீ’

ஆக்சன் பட இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கும் ‘ரொம்ப நல்லவன்டா நீ’

ஆக்சன் படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குனர் A. வெங்கடேஷ்… ராண்டேவோ மூவி மேக்கர்ஸ் சார்பில் தீபக் குமார் நாயர் தயாரிக்கும் ‘ரொம்ப நல்லவன்டா நீ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 

காமெடி திரில்லராக தயாராகி வரும் இப்படத்தில்  நாயகனாக மிர்ச்சி செந்தில், கதாநாயகியாக சுருதி பாலா நடிக்கிறார்கள்.

முக்கியமான கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க  வில்லனாக எத்தன் புகழ் ‘ சர்வஜித்’ நடிக்கிறார். பல வெற்றி படங்களை இயக்கியதோடு, ‘அங்காடி தெரு’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய இயக்குநர் வெங்கடேஷ், இப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

“என் படங்களில் நகைச்சுவைக்கு முக்கிய இடம் உண்டு. எனினும் முழு நீள காமெடி படத்தை நான் இயக்கியதில்லை. இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக  இருந்தது.  

முன்பின் அறியாத இரண்டு நபர்களின் ஏழு நாட்கள் நட்பு, அதன் தொடர்ச்சியாக ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களின் அடிப்படையில் அமைந்ததே ‘ரொம்ப நல்லவன்டா நீ’.

மனோகர் ஒளிப்பதிவில், ராம் சுரேந்தர் இசை அமைப்பில், கனல் கண்ணனின் சண்டை பயிற்சியில், விஜய் படத் தொகுப்பில் இந்த படம் குறுகிய காலத்தில் வேகமாக படமாக்கப்பட்டது. 

எனது  இயக்கத்தில் வெளி வந்த பெரும்பாலான படங்கள் வணிக ரீதியாக வெற்றிப் படங்களே. சமீபத்திய டிரென்டான நகைச்சுவை இந்த படம் முழுவதிலும் நிறைந்த்திருக்கும்“ என்கிறார் இயக்குனர் A.வெங்கடேஷ். 

Our Score