EVOKE PRODUCTIONS சார்பில் தயாரிப்பாளர் A. மதிவாணன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘படை வீரன்’.
இந்தப் படத்தின் கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாகியுள்ளார். மிக முக்கிய கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடித்திருக்கிறார். நாயகியாக அம்ரிதா ஐயர் அறிமுகமாக, இயக்குநர் மனோஜ் குமார், இயக்குநர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனனர்.
ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன், படத் தொகுப்பு – புவன் ஸ்ரீனிவாசன், கலை இயக்குநர் – சதீஷ் குமார், பாடல்கள் – தனா, பிரியன், மோகன் ராஜன், ஒலி வடிவமைப்பு – S.சிவகுமார், நடனம் – விஜி சதீஷ், சண்டை காட்சிகள் – ‘தில்’ தளபதி, STILLS – A. ராஜா, PRO – நிகில். இயக்குநர் மணிரத்தினத்திடம் துணை இயக்குநராக பணிபுரிந்த தனா, இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் நேரத்தில் சமீபத்தில் ‘படை வீரன்’ படத்தை பார்த்த தனுஷ் படத்தை வெகுவாக பாராட்டியதுடன், இந்த வெற்றி படத்தில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டுமென விரும்பி ஒரு பாடலை பாடி தருவதாக கூறியிருக்கிறார்.
உடனடியாக இயக்குநர் தனா, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, விஜய் யேசுதாஸ் மற்றும் கவிஞர் பிரியனுடன் அமர்ந்து, இசையமைப்பாளர் மற்றும் கவிஞருக்கு இயக்குநர் தனா சூழ்நிலையை விளக்கி, கார்த்திக் ராஜாவின் அருமையான டியூனுக்கு பிரியனின் வரிகளில் ‘லோக்கல் சர்க்கா பாரின் சரக்கா’ என்ற படு துள்ளலான பாடலை பாடி கொடுத்திருக்கிறார் நடிகர் தனுஷ்.
ஒரு பாடகர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ஒரு பிரபல நடிகர் பின்னணி பாடியிருப்பது இதுவே முதல் முறை. இப்பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது.