நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தசரா’ திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் ‘தீக்காரி’ பாடல் வெளியானது!
லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நேச்சுரல் ஸ்டார் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வருகிறது ‘தசரா.’
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இயக்கம் – ஸ்ரீகாந்த் ஒதெலா, தயாரிப்பு – சுதாகர் செருகுரி, தயாரிப்பு நிறுவனம் – லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ், ஒளிப்பதிவு – சத்யன் சூரியன் ISC, இசை – சந்தோஷ் நாராயணன், எடிட்டர் – நவின் நூலி, தயாரிப்பு வடிவமைப்பாளர் – அவினாஷ் கொல்லா, நிர்வாகத் தயாரிப்பாளர் – விஜய் சாகந்தி, சண்டைப் பயிற்சி இயக்கம் – அன்பறிவு, பத்திரிகை தொடர்பு – சதீஷ்குமார், சிவா (Aim).
இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘தீக்காரி’ வெளியாகியுள்ளது. மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
‘தசரா’ படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘தீக்காரி தூரம் ஆக்குறியாடி’ பாடல் ஒரு மென் சோக காதல் பாடலாக மனதை மயக்குகிறது. நாயகனின் காதல் வலியைச் சொல்லும் இப்பாடல் கேட்டவுடனே மனதிற்குள் ஒட்டிக் கொள்ளும், அழகான பாடலாக அமைந்துள்ளது.
ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இப்பாடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோ பாடலில் தோன்றுவதுடன் நாயகன் நானியுடன் இணைந்து, டான்ஸும் ஆடியுள்ளார். இவர்கள் கூட்டணியைத் திரையில் பார்ப்பது, பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
இந்த ‘தசரா’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் மார்ச் 30-ம் தேதியன்று வெளியாகிறது.