full screen background image

லைகா நிறுவனம் தயாரிப்பில் அருள்நிதி-ஆத்மிகா நடிக்கும் ‘திருவின் குரல்’ திரைப்படம்

லைகா நிறுவனம் தயாரிப்பில் அருள்நிதி-ஆத்மிகா நடிக்கும் ‘திருவின் குரல்’ திரைப்படம்

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் புதிய படம் ‘திருவின் குரல்’ (Voice of Thiru)!

லைகா புரொடக்‌ஷன்ஸ், பெரிய பட்ஜெட் பிளாக் பஸ்டர் படங்களை மட்டும் தயாரிக்காமல், அனைத்து தரப்பு பார்வையாளர்களின் இதயத்தையும் வென்ற உள்ளடக்கம் சார்ந்த பொழுது போக்கு படங்களைத் தயாரிக்கும் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமாகவும் திகழ்கிறது.

இந்த வரிசையில் சமீபத்தில் இந்நிறுவனம் தயாரிக்கும் 24-வது படத்திற்கு ‘திருவின் குரல்’ (Voice of Thiru) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். ஆத்மிகா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரப், ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மகேந்திரன், முல்லையரிசி மற்றும் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இசை – சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு – சின்டோ போடுதாஸ், படத் தொகுப்பு – கணேஷ் சிவா, கலை இயக்கம் – இ.தியாகராஜன், சண்டை இயக்கம் – திலிப் சுப்பராயன், பாண்டம் பிரதீப், பாடல் வரிகள் – உமாதேவி, கருப்பன், ஆடை வடிவமைப்பாளர் – டினா ரொசாரியோ, ஒப்பனை – ஆர்.சீரலன், ஒலி வடிவமைப்பு – பிரதாப், ஒலிக் கலவை – டி.உதயகுமார், VFX – ஆர். ஹரிஹர சுதன், ஸ்டில்ஸ் – மோதிலால், DI – இன்ஃபினிட்டி மீடியா, கலரிஸ்ட் – சண்முக பாண்டியன்.எம், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன், இயக்குநர் குழு – கிஷோர் கே.குமார், ஹரி பிரசாத் வி, தயாரிப்பு நிர்வாகி – கே.ஆர்.பாலமுருகன், சீனியர் எக்ஸிகியூட்டிவ் புரொடக்ஷன்ஸ் – சந்திரசேகர் வி, நிர்வாகத் தயாரிப்பாளர் – சுப்ரமணியன் நாராயணன். லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் – ஜி.கே.எம்.தமிழ் குமரன், தயாரிப்பு – சுபாஸ்கரன், எழுத்து, இயக்கம் – ஹரிஷ் பிரபு.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஹரிஷ் பிரபு, இதற்கு முன் அருண்குமாரிடம் ’பண்ணையாரும் பத்மினியும்’, ’சேதுபதி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர், அதைத் தொடர்ந்து ’புரியாத புதிர்’ படத்தில் ரஞ்சித் ஜெயக்கொடியிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

படத்தின் தலைப்பில் ’திருவின் குரல்’ எனக் குறிப்பிடுவது, கதாநாயகனது கதாபாத்திரம் பேச்சு குறைபாடு இருப்பவராக(speech impairment) சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை படம் கூற இருக்கிறது. அருள்நிதி மகனாக நடிக்க, இயக்குநர் இமயம் பாரதிராஜா அவரது தந்தையாக நடிக்கிறார்.

இந்தத் ’திருவின் குரல்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் 42 நாட்களில் முடிவடைந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களிலும், சென்னையில், நகர்ப்புற பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல  இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடும்.

Our Score