full screen background image

“சிங்கம்-3’ படத்தை இணைய தளங்களில்  வெளியிடக் கூடாது…” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

“சிங்கம்-3’ படத்தை இணைய தளங்களில்  வெளியிடக் கூடாது…” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

நடிகர் சூர்யா நடித்த ‘சிங்கம்-3’ திரைப்படத்தை தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் எந்தவொரு இணையத்தளமும் வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் சிங்கம்-3 திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஸ்டூடியோ கிரீன் K.E. ஞானவேல் ராஜா சார்பில் வக்கீல் விஜய் ஆனந்த் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கல்யாணசுந்தரம், “சிங்கம்-3’ திரைப்படத்தை எவரும், எந்தவொரு இணைய தளத்திலும் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் வெளியிடக் கூடாது…” என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

surya-anuskha shetty

இதற்கு முன் இதேபோல் ரஜினிகாந்த் நடித்திருந்த ‘கபாலி’ திரைப்படத்தையும் யாரும் தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் இணையத் தளங்களில் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Our Score