full screen background image

ஃசெல்பி மோகத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘சண்டிக்குதிரை’

ஃசெல்பி மோகத்தின் பின்னணியில் உருவாகியிருக்கும் ‘சண்டிக்குதிரை’

சன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘சண்டிக்குதிரை.’

இந்தப் படத்தில் நடிகர் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். சின்னத்திரையில் பிரபலமான இவர் தற்போது பெரிய திரையில் காலூன்ற முயற்சி செய்து வருகிறார். அதன் முதல் படியாக ‘மேல்நாட்டு மருமகன்’ என்ற படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். 

இப்போது இரண்டாவதாக இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார். மற்றும் கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ், சூர்யகாந்த், போண்டா மணி, ரிஷா அருள், பெருமாயி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  வீரா, பாடல்கள், இசை  –  வாரஸ்ரீ. இவர் பக்தி பாடல்கள் எழுதுவதில் வல்லவர். இதுவரை 6000 பக்தி பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது பாடல்களை எல்லா பிரபல பாடகர்களும் பாடி இருகிறார்கள். ‘நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா’ என்ற பாடலும் அடக்கம். இவர் இசையமைக்கும் முதல் படம் இது.

கலை  –  கே.எஸ்.புவனா, நடனம்   –  தினா, சதீஷ், ஸ்டண்ட்   – டென்ச் ரமேஷ், எடிட்டிங்  – ஜூட் தேடன்ஸ், இணை இயக்கம்  – அருள், தயாரிப்பு நிர்வாகம்  –  என்.எ.நாதன், இணை தயாரிப்பு   –  பி.பிரகாசம், தயாரிப்பு  – சன்மூன் கம்பெனி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  அன்பு மதி. இவர் பல பத்திரிக்கைகளில் 350 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி உள்ளார். அத்துடன் எல்லா பிரபலமான தொலைக்காட்சிகளிலும் இயக்குநராக, கதாசிரியராக பணியாற்றி இருக்கிறார்.  நிறைய விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார்.

படம் பற்றி இயக்குநர் அன்புமதி பேசும்போது, “விஞ்ஞான வளர்ச்சி என்பது நன்மையும், தீமையும் கலந்தே இருக்கிறது. இன்று மொபைல் போன் இல்லாத ஆளே இல்லை. தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட மொபைல் போன் இன்று வேறு பரிமாணத்திற்கு மாறி விட்டது. அதன் இன்னொரு பக்கத்தை இதில் பதிவு செய்திருக்கிறோம்.

செல்பி என்கிற வியாதியின் கருப்பு பக்கங்களை மிக நுணுக்கமான திரைக்கதை மூலம் உணர்த்தி உள்ளோம். புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். காமெடி கலந்த திகில் படமாக ‘சண்டிக்குதிரை’ உருவாகியுள்ளது..” என்றார்.

Our Score